India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் கணினித் தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் வெளிமாநிலங்களில் வேலைக்கு போகாமல் புதுச்சேரியில் இருந்தே பணி ஆற்றும் வகையில் புதுச்சேரியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி வலியுறுத்தினார்.
மத்திய பல்கலைக்கழகத்தில் தற்சமயம் உள்ள அனைத்து நிலை படிப்புகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு அமுல்படுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி விரிவாக எடுத்துரைத்து அது சம்பந்தமாக ஒரு கடிதத்தையும் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற அடிப்படையிலும் துணை ஜனாதிபதியிடம் வழங்கினார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
புதுச்சேரித் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை பாரதிதாசன் பெயரனும் பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவருமான கவிஞர் கோ.பாரதி ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார். அப்போது, “புதுச்சேரிக்கு தனிப்பெருமை ஏற்படுத்தித் தந்தவர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் புதுச்சேரி விமான நிலையத்திற்குப் பாவேந்தர் பாரதிதாசன் விமான நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும்” கோரிக்கை என்றார்.
காரைக்கால் ஜமாத்தார்கள் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் காரைக்காலில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நபரிடம், பெண் ஒருவர், ஆசை வார்த்தை கூறி மது போதையை ஏற்றிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போனை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை உருளையான்பேட்டை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்நிலையில் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள இமாக்குலேட் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவி சாதனா செய்தியாளர்களிடம் கூறும்போது, முதல் முறையாக பொது தேர்வு எழுத வந்துள்ளதாகவும், வினாத்தாளை பார்த்துவிட்டு பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதினால் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை எழுதிவிடலாம். இதனால் தேர்வு பயம் இல்லை என்றார்.
மடுகரையில் 2022இல் நடந்த இறுதி ஊர்வலத்தில், ஏரிப்பாக்கத்தை சேர்ந்த மதியழகனுக்கும் முத்துநகர் தீனதயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதியழகனை தீனதயாளன், அவரது நண்பர் சுதந்திரராஜ் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், தீனதயாளன், சுதந்திரராஜ் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி, வரும் 15ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. பகுதியில் 20 தேர்வு மையங்கள், காரைக்கால் பகுதியில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன அமைக்கப்பட்டுள்ளன. பகுதியில் 146 தனியார் பள்ளிகளை பள்ளிகளைச் 7,278 பேரும், 573 தனித் தேர்வர்களும், காரைக்கால் பகுதியில் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 497 பேரும், 284 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் பெண்களின் மக்கள்தொகை வளர்ச்சியை கருத்தில்கொண்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் பெண் காவலர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா புதுச்சேரி சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் 98 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.