India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை போன்றவற்றில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டு புதுச்சேரி போலீஸ் ஐஜி அஜித்குமார் சிங்லா, மாகி எஸ்பி சரவணன் மற்றும் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது. அதனை இன்று முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின விழாவில் வழங்கினார்
காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர் கண்ணதாசன் நேற்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “வரும் 2026-27ம் கல்வியாண்டில் ஜவகர் நவோதயா வித்யாலயாவில் 6ம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கால வரம்பு, வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வாளர்கள் www.navodaya.gov.in அல்லது https:// cbseitems.rcil.gov.in/nvs என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.” என கூறியுள்ளார்.
மல்டி லெவல் மார்க்கெட்டிங் அடிப்படையில், செல்போன் செயலியில் முதலீடு செய்தால் 30 நாளில் இரட்டிப்பு பணம் தருவதாக, சமூக வலைதளத்தில் தகவல் வைரலானதை நம்பி, புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த பலர், மர்ம நபர்கள் அனுப்பிய லிங்க்கில் இணைந்து கோடிக் கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இதில் ஏமாந்தவர்கள் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தற்போது புதிதாக ‘ஸ்டார்லிங்க்’ என்ற செயலியில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என 100க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஆன்லைனில் வரும் எந்தவித முதலீடு தொடர்பான செயலிகளை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.”
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் வெளியிட்டுள்ள செய்தியில், “சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த நாளில், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் நாம் சுதந்திரம் அடைந்தோம். அவர்களுடைய தியாகங்களை நினைத்துப் போற்றுவது நம்முடைய கடமை.” என கூறியுள்ளார்.
பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
▶️ வயது வரம்பு – 21-30 (ஓபிசி – 33, எஸ்.சி – 35, மாற்றுத்திறனாளிகள் – 40)
▶️ இடஒதுக்கீடு: SC – 12, ST – 1, OBC – 17, EWS – 1, பொதுப்பிரிவு – 6
▶️ சம்பளம் : ரூ.22,405 முதல் ரூ.62,265
▶️ விண்ணப்ப கட்டணம்: ரூ.850 (எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.100)
▶️ அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தியில், “அனைவருக்கும் எனது அன்பான சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரப் போராட்ட வீரர்களின் அயராத உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகங்களாலும் நாம் பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாக ஒவ்வொரு வீட்டிலும் நாம் ஏற்றியுள்ள மூவர்ணக் கொடி, நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டின் கலங்கரை விளக்கமாகும்.” என கூறியுள்ளார்
புதுச்சேரி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலில் ஒரு சிறந்த ஆளுமை, 1884 ஆம் ஆண்டு காரைக்காலுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவரான எஸ்.அரங்கசாமி நாயக்கர் ஆவார். இவர், வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் அவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. காந்தியின் கொள்கைகளை அவர் தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றியதால், அவர் பிரெஞ்சு காந்தி என்று அழைக்கப்பட்டார். இத்தகவை அனைவருக்கு SHARE செய்ங்க
புதுச்சேரியில் உள்ள புதுக்குப்பம் கடற்கரையில் அமைந்துள்ள கர்ணேஷ்வர் நடராஜர் கோயில், பிரமிடு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது எகிப்திய பிரமிடுகள் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய கோயில் பாணியின் கலவையாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் இருக்கும் ஏழு படிகள் உணர்தலைக் குறிப்பதாக கூறுகின்றனர். இக்கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும் என நம்பபடுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.