India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறையின் கீழ், மாநிலம் முழுவதும் ஜவகர் சிறுவர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஜவஹர் சிறுவர் இல்லங்களில் பணிபுரியும் 56 பயிற்றுநர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுச்சேரி பள்ளி கல்வித்துறை துணை இயக்குநர் வெர்பினா ஜெயராஜ் நேற்று பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி துணை ஆட்சியர் அலுவலகங்களின் தொடர்பு எண்கள்: துணை ஆட்சியர் (தலைமையகம்): 0413-2299513 , துணை ஆட்சியர் (வருவாய்) வடக்கு: 0413-2231251 , துணை ஆட்சியர் (வருவாய்) வடக்கு மின்னஞ்சல்: dcrnorth.py.gov.in துணை ஆட்சியர் (வருவாய்) வடக்கு தொலைநகல்: 0413-2248759. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..
புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிரகாஷ்(40) என்பவர் அலுவலராக உள்ளார். இந்நிலையில், நிறுவனத்துக்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து டிராயரில் இருந்த ரூ.50 ஆயிரத்தைத் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பவருக்கும், வீடு கொடுத்து உதவிய அவரது நண்பர் கதிர்வேல் (29) என்பவருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் வழங்க புதுச்சேரி அரசுக்கு, பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.
கோவில் என்றாலே கோபுரமும் கலசமும் இருக்கும் என்பதிலிருந்து முழுமையாக மாறுபட்ட கோவில்தான் புதுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள கார்னேஸ்வரர் நடராஜர் கோவில். வழக்கமான கோவில் போல இல்லாமல் பிரமிடு வடிவில் அமைந்துள்ள இக்கோவிலில் சென்று வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பிரபல சுற்றுலா தளமாக விளங்கும் இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். SHARE IT.
புதுச்சேரி ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்புகளான பிடிஎப் 15, பிடிசிசி 9 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவர் சோ்க்கை இணையதளம் வழியாக தொடங்கியுள்ளது. வரும் மே 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத்தோ்வு நடைபெறவுள்ளன. ஆகவே, தகுதியுள்ள மாணவர்கள் மே 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஜிப்மர் நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் நலச் சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் தொழில்நுட்பக் கையேடு வெளியிடப்படுகிறது. அதில், வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெயா், பதவி மற்றும் தொடர்புக்கு கைப்பேசி எண்கள் உள்ளிட்டவையும். மேலும் துறை சம்பந்தப்பட்ட முக்கிய இடங்கள், மழைப் பொழிவு உள்ளிட்ட பருவநிலை புள்ளிவிவரங்கள், பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
புதுச்சேரி காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை, காவல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை முதல் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம்வரை போலீஸ் அதிகாரிகள் செய்த வீரதீர செயல்களை பட்டியலிட்டு இந்த விருதுக்கு அனுப்ப, பரிந்துரைகளை வரும் 24ம் தேதிக்குள் டில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க கூறப்பட்டுள்ளது.
புதுவையில் பணியாற்றும் போலீசார் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவ ரீதியாக தகுதியுடையவர் என சான்றிதழ் வழங்குவது கட்டாயமாகும். மருத்துவ பரிசோதனைக்கு பின், மருத்துவ அதிகாரி ஒப்புதல் சான்றிதழ் வழங்குவார். சீனியர் எஸ்.பி., எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் போலீசாருக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்து வருடாந்திர அறிக்கையை வரும் 30ஆம் தேதிக்குள் அனுப்ப சீனியர் எஸ் எஸ் பி அனிதா ராய் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் உத்தரவின்படி, தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், பிற துறைகளில் வகித்து வந்த கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்க கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி, புதுச்சேரி, தலைமை தேர்தல் அதிகாரியாக மட்டும் ஜவகர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.