India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களால் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படும் இந்த யுகாதி பண்டிகை, புதிய தொடக்கத்தையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் வழங்குவதாக அமையட்டும், எனக் கூறி மேலும் புதுச்சேரி மக்களுக்கு தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு யுகாதி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை [சிடிசி] சர்க்கிள் – 1 கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் வீரசெல்வத்திற்கு புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக இருந்த தீனதயாளன் சமீபத்தில் லஞ்ச புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதையடுத்து காலியாக இருந்த அப்பதவிக்கு வீரசெல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மின்துறையில் இளநிலை பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது. இதில் 73 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது-30, OBC -8, MBC -13, EBC -1, BCM -1, SC -12, ST -1, EWS -7, மாற்றுத் திறனாளிகள் -3 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31 ஆம் தேதி ஆகும். மேலும் அறிய <
துத்திப்பட்டு அருகே பைக் மீது லாரி மோதி பைக்கில் சென்ற மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து முதல் தகவல் அறிக்கையை வழங்க சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஐஜியிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரின் புதுச்சேரி தலைமை செயலாளர் ஒப்புதல் பெற்று, எஸ்.ஐ பாஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் நேற்று எஸ்.ஐ பாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரியில் கணினித் தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் வெளிமாநிலங்களில் வேலைக்கு போகாமல் புதுச்சேரியில் இருந்தே பணி ஆற்றும் வகையில் புதுச்சேரியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி வலியுறுத்தினார்.
மத்திய பல்கலைக்கழகத்தில் தற்சமயம் உள்ள அனைத்து நிலை படிப்புகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு அமுல்படுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி விரிவாக எடுத்துரைத்து அது சம்பந்தமாக ஒரு கடிதத்தையும் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற அடிப்படையிலும் துணை ஜனாதிபதியிடம் வழங்கினார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
புதுச்சேரித் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை பாரதிதாசன் பெயரனும் பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவருமான கவிஞர் கோ.பாரதி ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார். அப்போது, “புதுச்சேரிக்கு தனிப்பெருமை ஏற்படுத்தித் தந்தவர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் புதுச்சேரி விமான நிலையத்திற்குப் பாவேந்தர் பாரதிதாசன் விமான நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும்” கோரிக்கை என்றார்.
காரைக்கால் ஜமாத்தார்கள் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் காரைக்காலில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நபரிடம், பெண் ஒருவர், ஆசை வார்த்தை கூறி மது போதையை ஏற்றிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போனை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை உருளையான்பேட்டை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்நிலையில் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள இமாக்குலேட் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவி சாதனா செய்தியாளர்களிடம் கூறும்போது, முதல் முறையாக பொது தேர்வு எழுத வந்துள்ளதாகவும், வினாத்தாளை பார்த்துவிட்டு பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதினால் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை எழுதிவிடலாம். இதனால் தேர்வு பயம் இல்லை என்றார்.
Sorry, no posts matched your criteria.