India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சாமி கோயிலில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இத்தலம் ராகு பகவானுக்குரிய தலமாகும். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் நாளை மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
புதுச்சேரி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு உதவி எண்கள். குடிமக்கள் குறை தீர் மையம் – 1077, குற்றங்கள் தடுப்பு – 1090, மீட்பு மற்றும் நிவாரண உதவி – 1070, பெண்கள் உதவி எண் – 1091, குழந்தைகள் உதவி எண் – 1098, சாலை விபத்து – அவசர உதவி – 1073, அவசர ஊர்தி – 102 மற்றும் 108, தீயணைப்பு உதவி – 101, காவல் கட்டுப்பாட்டு அறை – 100. இந்த எண்களை SHARE செய்து பிறருக்கும் தெரியப்படுத்தவும்.
ஒதியஞ்சாலை பகுதியில் வசிக்கும் மின்துறை அதிகாரி பன்னீர்செல்வம் சில ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். அவரை அந்தப் பெண், அவரது தோழிகளுடன் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம், பழைய பூரணாங்குப்பத்தை சேர்ந்த மணிமேகலை, பெரம்பை சுகந்தி, வாணரப்பேட்டை அம்மு என்பதும், 3 பேரும் ரவுடிகளின் மனைவிகள் என்பதும் தெரியவந்ததையடுத்து, அவர்களை கைது செய்துள்ளனர்.
உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் ரூ. 60 கட்டணம் மட்டும் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை பிறருக்கு ஷேர் செய்து தெரியபடுத்துங்க
கேலோ இந்தியா இளைஞர் தேசியவிளையாட்டு விழா வரும் மே 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ளது இப்போட்டியில், புதுச்சேரி மாநிலம் சார்பில், பங்கேற்க பல்வேறு விளையாட்டுகளில் வீரர்கள் தேர்வு முகாம் லாஸ்பேட்டையில் நடந்தது. மொத்தம் 26 பேர் நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி மேற்கொண்டு அடுத்த மாதம் பீகாரில் நடைபெறும் போட்டியில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்க உள்ளனர்
புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்பி நாரா சைத்தானியா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இளம்பெண்களுக்கு கூறும் அறிவுரை என்னவென்றால் சமூகவலை தளங்களில் முகம் தெரியாத நபர்களின் பிரண்ட்ஸ் ரெகுவஸ்ட் ஏற்றுக்கொள்ளக்கூடாது. முகம்தெரியாத நபரிடம் பேசவேண்டாம். பெண்கள் உடல் பாகங்கள் தெரியும் அளவிற்கு எந்த ஒரு புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பகிரவேண்டாம்” என்று எச்சரித்துள்ளார்.
புதுவை பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ரூ.50,000 வரை சம்பளத்தில் காலியாக உள்ள Guest Faculty (English) பணியிடம் நிரப்ப உள்ளதாகவும், 28.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இது குறித்த மேலும் தகவலுக்கு பல்கலைக்கழகத்தை தொடர்ப்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க…
புதுச்சேரி கரியமாணிக்கம், ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன்(21). பட்டதாரியான இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தாமோதரன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் அருகே திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு அமிர்தகடேஸ்வரரும், அபிராமி அம்மையாருக் மூலவர்களாக உள்ளனர். தன்னை நாடி வந்த மார்க்கண்டேயனின் உயிரை எமனிடம் இருந்து காத்த அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய், தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள சிவனுக்கு பாசக்கயிறு தடம் இருப்பாத கூறப்படுகிறது. தெரியாதவர்களுக்கு ஷேர் செய்யவும்
தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவியின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் ரூ.75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) <
Sorry, no posts matched your criteria.