Pondicherry

News February 25, 2025

புதுவை: மூதாட்டியிடம் 10 பவுன் நகை திருட்டு

image

புதுச்சேரி அரியாங்குப்பம் அரவிந்தா் நகா் பகுதியைச் சேர்ந்தவர் ஆழ்ந்துமரி செராா்தின் இவா் கடலூா் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது இருவா் அவரை மறித்து திருடர்கள் நடமாட்டமும் உள்ளதாகக் கூறி அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை கழற்றித் அதை தாளில் மடித்து கொடுத்தனராம். வீடு சென்றதும் மூதாட்டி பொட்டலத்தைப் பிரித்த போது நகை இல்லை அவர் அரியாங்குப்பம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.

News February 25, 2025

விழுப்புரம் – புதுச்சேரி டோல்கேட் கட்டண வசூல் தொடக்கம்

image

விழுப்புரம், புதுவை வழியாக நாகப்பட்டினத்துக்கு 194 கிமீ தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நெடுஞ்சாலையில் கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பு நேற்று துவங்கியது. டோல்கேட் மேற்கூரை இல்லாமல் அவசர அவசரமாக கட்டணம் வசூலிக்க திறக்கப்பட்டதாக கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

News February 24, 2025

புதுவை முதல்வருக்கு தவெக அழைப்பு

image

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் எனது நண்பர் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறிய நிலையில் அழைப்பு. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாஜக கூட்டணியில் உள்ளது  குறிப்பிடத்தக்கது.

News February 24, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் சிக்கி சென்ற ஆண்டு மட்டும் 30 கோடி ரூபாய்க்கு மேல் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பணத்தை இழந்துள்ளனர். இணைய வழி மூலமாக வருகின்ற விளம்பரங்களை நம்பி எந்த ஒரு பங்கு வர்த்தகம் மற்றும் பணத்தை முதலீடு செய்யும் செயலில் இறங்கி பணத்தை இழக்க வேண்டாம் என்று தெரிவித்தனர்.

News February 24, 2025

புதுச்சேரியில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி

image

புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ம. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து வரும் மார்ச் மாதம் 03.03.2025 முதல் 08.03.2025 ஆம் தேதி வரை ”தேனீ வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு மேலாண்மை” குறித்த ஆறு நாட்கள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

News February 24, 2025

புதுவையில் கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் அணிவகுப்பு

image

புதுச்சேரி ரெயின்போ நகரில் கடந்த சில தினங்கள் முன்பு ரவுடி ரஷி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசாருடன், கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் நேற்று இரண்டாவது நாளாக அணிவகுப்பு சென்றனர்.

News February 24, 2025

தேர்வு அச்சத்தை போக்க 14416 எண்ணிற்கு டயல் செய்யுங்கள்

image

புதுச்சேரியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு பயத்தில் இருந்து விடுபட கட்டணமில்லாத 14416 தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை மனநல துறை டாக்டர் பாலன் கூறுகையில், ‘பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் ரிலாக்ஸான மனநிலையில் இருக்க வேண்டும். தேர்வு பயம் இருந்தால் மாணவர்கள் கட்டணமில்லாத தொலைபேசி 14416 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவச மன நல ஆலோசனை பெறலாம்’.

News February 23, 2025

புதுச்சேரி காகிதமில்லா சட்டப்பேரவையாக மாற்றம்

image

புதுச்சேரி மாநிலத்தில் காகிதமில்லா சட்டப்பேரவை பயிற்சி அரங்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்  முன்னிலையில் முதலமைச்சர் என். ரங்கசாமி ரிப்பன் வெட்டி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமிநாராயணன்  சட்டமன்ற உறுப்பினர்களுடன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்.

News February 23, 2025

புதுவை போக்குவரத்து துறை எச்சரிக்கை

image

புதுச்சேரியில் பைக் டாக்சிக்கு உரிய அனுமதி பெறவில்லை. பொதுமக்கள் சொந்த வாகனத்தை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வணிக நோக்கத்திற்காக வாகனம் பயன்படுத்தும்போது அதற்கான வரி செலுத்தி பெர்மிட் பெற வேண்டும். மஞ்சள் நிற நம்பர் பிளேட் பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

News February 22, 2025

விவசாயிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய புதுச்சேரி போக்சோ கோர்ட்டு

image

விழுப்புரம் மாவட்டம் கயத்தார் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன்(31) கடந்த 27.06.2019 அன்று திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக வழக்குப்பதிந்து புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜானகிராமனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், பெற்றோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!