India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள, இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், பல்வேறு தொழில்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி, சிசிடிவி கேமரா அமைத்தல் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியை சேர்ந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 13 நாட்கள் முழு நேர பயிற்சி நடக்கும். உணவு இலவசமாக வழங்கப்படுகிறது பயிற்சிக்கு, மார்ச் 2ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள, இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், பல்வேறு தொழில்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி, சிசிடிவி கேமரா அமைத்தல் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியை சேர்ந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 13 நாட்கள் முழு நேர பயிற்சி நடக்கும். உணவு இலவசமாக வழங்கப்படுகிறது பயிற்சிக்கு, மார்ச் 2ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
புதுச்சேரி திமுக அமைப்பாளர் எதிர்க்கட்சி தலைவருமான சிவா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ”தமிழ்நாடு முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், மாபெரும் குருதிக்கொடை வழங்கும் முகாம் நாளை (பிப்.28) வெள்ளிக்கிமை காலை 9.00 மணிக்கு சித்தன்குடி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது கழக நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்
புதுச்சேரி முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமரா மற்றும் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவற்றை ஒருங்கிணைக்கும் கட்டுப்பாட்டு மையத்திலும் அனைத்து பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளது. தற்போது இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் முடிந்து வருகிற மார்ச் 2வது வாரம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்தாண்டு மாசி மகத்தை முன்னிட்டு காரைக்காலில் மார்ச் 13 ஆம் தேதி வியாழக்கிழமையும், புதுச்சேரியில் மார்ச் 14 வெள்ளிக்கிழமையும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் பொதுத்தேர்வுகள் அந்த தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை கூனிச்சம்பட்டு ரஞ்சித்குமார், இவரது சொந்த நிலத்தில் நேற்று காலை வேலை செய்துவிட்டு வந்தபோது அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் முன்விரோதம் காரணமாக ரஞ்சித்குமாரிடம் வாய் தகராறில் ஈடுபட்டு, தான் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் வெட்ட வந்தபோது ரஞ்சித்குமார் தலையில் அடிப்பட்டது, இது குறித்து ரஞ்சித் குமார் அளித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நல வழித் துறை சார்பாக மாபெரும் சுகாதாரத் திருவிழா உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புதுச்சேரி, கருவடிக்குப்பம், சிவாஜி சிலை அருகில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி முதல் மார்ச் இரண்டாம் தேதி (28.02.25- 02/03/25) வரை நண்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுவை பள்ளிக்கல்வி துணை இயக்குனர் வெர்பினோ ஜெயராஜ் நேற்று (பிப்.25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரிவுரையாளர்களாக பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் புதுவை, காரைக்காலில் 363 ஆசிரியர்களும், மாகியில் 39 ஆசிரியர்களும், ஏனாமில் 12 ஆசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் இன்று செய்தியாளர் சந்திப்பில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகி12 ஆம் முதல்வர் ரங்கசாமி 2025 -2026 ஆம் நிதிநிலை ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சபாநாயகர் டெபாசிட் இழப்பார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவரது சொந்த ஊரான மனவெளி தொகுதியில் போட்டியிட தயாரா என சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் செல்வம்
புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6-வது பகுதி பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கும். 12-ம் தேதி நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2025-26ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். என்று தெரிவித்தார்
Sorry, no posts matched your criteria.