Pondicherry

News April 4, 2025

அக்னிவீர் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீா் பொதுப் பணி, தொழில்நுட்பம், எழுத்தா், ஸ்டோா் கீப்பா், தொழில்நுட்பம், டிரேட்ஸ்மேன் உள்ளிட்டப் பிரிவுகளுக்கு புதுச்சேரி மாவட்டம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

News April 4, 2025

புதுவை காவல் நிலையங்களில் நாளை மக்கள் மன்றம்

image

புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி, டிஐஜி சத்திய சுந்தரம் மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்க உள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News April 4, 2025

புதுவை சட்டத்துறையில் வேலைவாய்ப்பு

image

புதுச்சேரி அரசில் குறைந்தபட்சம் அமைச்சக உதவியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் இரண்டு கன்சல்டன்ட் பதவியை நிரப்ப உத்தேசித்துள்ளது. இந்த பதவிக்கு வரும் 12ஆம் தேதிக்குள் https://law.py.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என சட்டத்துறை சார்பு செயலர் தெரிவித்துள்ளார்.

News April 4, 2025

பிரதமா் பயிா் காப்பீடு திட்டம், புதுவை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

image

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடியை பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயன் பெறலாம். நடப்பாண்டில் பயிா் செய்த விவசாயிகள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2025

காரைக்கால் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

image

GHIBLI AI மூலம் அனிமேஷன் புகைப்படம் பகிர்வது அதிகரித்து வருகிறது. இந்த செயலிகளில் பயனாளர் பகிரும் புகைப்படங்களை சேகரித்து அதில் உள்ள முக அம்சங்கள் மெட்டா தரவுகளை சேமித்து வைத்துக் கொள்வதுடன் இந்த தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது என காரைக்கால் சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை உங்க அன்பிற்குரியவர்களுக்கு SHARE செய்து அவர்கள் பாதுகாப்பாக இருக்க உதவுங்கள்…

News April 3, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுவை சைபர் கிரைம் சீனியர் எஸ்பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெரியாத நபர்களிடமிருந்து whatsapp/Instagram/Facebook மூலம் ஏதேனும் செய்திகள் வந்தால் நம்ப வேண்டாம். போலியான உடனடி கடன் செயலிகளை நம்ப வேண்டாம். மும்பை காவல்துறை, CBI மற்றும் TRAI அதிகாரிகள் போன்ற அழைப்புகள் வந்தால், அதனை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 3, 2025

துற்சக்திகளை நீக்கும் அம்பை காளி

image

காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் இந்த காளி கோயில் உள்ளது. புதுச்சேரியில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாகவும், வட இந்தியாவுக்கு அடுத்த இரண்டாவது காளி தலமாக விளங்குகின்றது. அரக்கனை கொன்ற காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட இங்கு அதிலிருந்து நிவர்த்தி பெற்றார். வழக்கு பிரச்சனைகள் உள்ளவர்கள், ஏவல், பில்லி, சூனியம் அனைத்தும் இங்கே வந்தால் தொலைந்து போகும் என்று கூறப்படுகின்றது.

News April 3, 2025

புதுவையில் மறுத் தேர்வு தேதி அறிவிப்பு

image

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் CBSC பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. கடந்த கல்வி ஆண்டில் 9 மற்றும் 11-ஆம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த புதுச்சேரி கல்வித்துறை உத்திரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும் மறுதேர்வு நடைபெறும்.

News April 3, 2025

BREAKING: புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு?

image

புதுச்சேரி வழுதாவூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், தற்போது சம்பவ இடத்தில் கோரிமேடு போலீசார் மற்றும் டி.நகர் போலீசார்; வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு தீயணைப்பு வாகனங்களும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

News April 3, 2025

புதுச்சேரி அரசு தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

image

புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் பணிகளை நிரப்புவதற்காக வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி அன்று காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வுகள், நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகின்றது. செய்முறை தேர்விற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!