Pondicherry

News March 13, 2025

 ‘ஏ’ கிரேடு சான்றிதழ் பெற்ற புதுச்சேரி மின்துறை

image

புதுச்சேரி மாநில மின்துறை சிறப்பாக செயல்படுவதாகவும் மின் கட்டண வசூலை சரியாக செய்வதாகவும் புதுச்சேரி மின்துறைக்கு அதிக அளவு வருவாய் ஏற்படுத்தியதற்காக புதுச்சேரி மின்துறைக்கு மத்திய மின்துறை அமைச்சகம் ‘ஏ’ கிரேடு தரவரிசை சான்றிதழ் வழங்கி உள்ளது. இதற்கு நேற்று காரைக்கால் தலைமை மின்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

News March 13, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அறிமுகமில்லாத எண்ணிலிருந்து பெண்களுக்கு அச்சுறுத்தப்படுகின்ற மாதிரி ஏதேனும் ஆபாச புகைப்படங்கள் வந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு புகார் செய்யுமாறும் அல்லது இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், அப்படி புகார் கொடுக்கும் பட்சதில் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News March 13, 2025

மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்த முதல்வர்

image

புதுச்சேரி சட்டபேரவை 15 ஆவது சட்டபேரவையின் ஆறாவது கூட்டதொடர் கடந்த 10ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மூன்றாம் நாள் நேற்று காலை 9.30 மணியளவில் 2025-26 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி செய்த நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் கவர்னர் மாளிகையில் கவர்னர் கைலாஷ்நாதனை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினார். மேலும் கவர்னரக்கு பட்ஜெட் புத்தகத்தையும் முதல்வர் வழங்கினார்.

News March 12, 2025

புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்க கௌரவத் தலைவர் மரணம்

image

புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவரும், சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில தலைவருமான ரவி ஜான் இன்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இரவு 8 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடலுக்கு புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

News March 12, 2025

மாநில பட்ஜெட்டை அதிமுக வரவேற்கிறது – அன்பழகன்

image

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், இன்றைய பட்ஜெட் உரையின் மீது, “அரசு சார்பு நிறுவனங்களின் மூலதன சொத்துக்களை உருவாக்க 300 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. பட்ஜெட், அரசின் நிதியுதவியை பெற்று பயன்பெறும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்தும். ஒருசில குறைகள் இருந்தாலும் அதிமுக இந்த பட்ஜெட்டை வரவேற்கிறது” என்று தெரிவித்தார்.

News March 12, 2025

புதுச்சேரியில் பட்ஜெட் உதவாத காகிதப்பூ – எதிர்கட்சித் தலைவர்

image

புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, “கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எல்லாம் கிடப்பில் உள்ள நிலையில், மணக்க மணக்க பட்ஜெட் உரை நிகழ்த்தி இருக்கிறார் முதல்வர். ஆனால் வெறும் காகிதப்பூவாக இருக்கிறது. புதுச்சேரியின் வருவாய், செலவினங்கள், கடன் வாங்க முடியாத நிலை ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள்‌” என்று தெரிவித்தார்.

News March 12, 2025

புதுச்சேரி ஏ.எஸ்.ஐ., சஸ்பெண்ட் – டிஜிபி உத்தரவு

image

புகார் மீது நடவடிக்கை எடுக்க தனது வண்டிக்கு ரூ.500க்கு பெட்ரோல் நிரப்பவும், தனக்கு ஷூ வாங்க ரூ.1,800 பணம் வாங்கிய ஏஎஸ்ஐ சுப்பிரமணியன் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உதவி சப்இன்ஸ்பெக்டர் சுப்ரமணியை, புதுச்சேரி டி.ஜி.பி., ஷாலினி சிங் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதற்கான ஆணை போலீஸ் பயிற்சி பள்ளியில், பயிற்சியில் உள்ள ஏ.எஸ்.ஐ., சுப்ரமணிக்கு வழங்கப்பட்டது.

News March 12, 2025

சட்டப்பேரவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர்

image

2025 – 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ரூ 13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார். விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 2,000 வழங்கப்படும் என்று பேரவையில் ரங்கசாமி அறிவித்தார். பின்னர் சட்டப்பேரவையை நாளை (மா.13) சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

News March 12, 2025

புதுவை காவல்துறைக்கு  ரூ. 401.50 கோடி ஒதுக்கீடு

image

இன்று நடந்த புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் “புதுச்சேரி காவல்துறைக்கு 2025-26 நிதியாண்டில் ரூ. 401.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 வயதினைக் கடந்து திருமணம் ஆகாத, கணவரை இழந்த மற்றும் வேலையற்ற ஆதிதிராவிடர் பழங்குடியின மகளிருக்கு மாதம் ரூ. 3000 நிதி உதவி திருமணம், வேலைக்கு செல்லும் வரை வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

News March 12, 2025

புதுவை குடும்பத் தலைவி உதவித் தொகை ரூ.2500ஆக உயர்வு

image

புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் நடைபெற்று வரும் நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏராளாமன அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில், புதுச்சேரியில் மகளிரின் நலன் கருதி குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500-ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!