India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை குறைக்க போலீஸாா் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். முத்தியால்பேட்டை, முதலியாா்பேட்டை, இலாசுப்பேட்டை, வில்லியனூா் கிருமாம்பாக்கம், பாகூா், தவளக்குப்பம் பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அதில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை, பீடி, சிகரெட் போன்றவற்றை கைப்பற்றி, 22 போ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஊர்க்காவல்படை(ஆண் மற்றும் பெண்), காவல் துறை, புதுவை தேர்வுக்கான போட்டி எழுத்துத் தேர்வு, குடிமை பணிகள் காரணமாக புதுவையில் 30.06.2024 காலை 10 – மதியம் 12 மணி வரை நடைபெறும். 16.06.2024 அன்று UPSC தேர்வு நடைபெறுகிறது. ஹால் டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்யும் தேதி விரைவில் ஆட்சேர்ப்பு இணையதளத்தில் வெளியிடப்படும். https://recruitment.py.gov.in தளத்தில் கூடுதல் தகவல்களை காணலாம்
புதுச்சேரி உருளையன் பேட்டையை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணிடம், விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆன்லைன் மோசடி கும்பல் ரூ.38 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். இது குறித்து அவர் புதுச்சேரி கோரிமேடு சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து ஆன்லைன் மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று(07.06.2024) மாலை துல் ஹிஜ்ஜஹ் பிறை தென்பட்டதால் வருகிற 17.06.2024(திங்கட்கிழமை) அன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஹஜ்ஜுப் பெருநாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக புதுச்சேரி மாநில அரசு டவுன் காஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட புதுச்சேரி திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
புதுவை சென்டாக் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான புதிய பதிவு சென்டாக் இணையதளத்தில் ஜூன்.10ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே B.Sc. Nursing படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தாலும், புதியதாக சென்டாக் இணையதளத்தின் மூலம் B.Sc.Nursing படிப்பிற்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம். தவறினால் பொது நர்சிங் நுழைவுத் தேர்வு – 2024லில் (PCNET) பங்கேற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
புதுவை மின்துறையில் ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற இளநிலை, உதவி பொறியாளர்கள் 5 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணியில் சேர விரும்புபவர்கள் 64 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்கவேண்டும். பணியில் சேர விரும்புபவர்கள் தங்களது முழு விபரங்களை se1ped, pon@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதுவையில் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்பவர்கள், சாலையோரம் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தப்படுகிறது .7 நாட்களுக்குள் இடமாற்றம் செய்யப்படாத வியாபாரிகளின் பொருட்கள் பிரதான சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும் என்று உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுவை மாணவர்கள், பெற்றோர்கள் நல சங்க தலைவர் வை.பாலா சுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில், தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு முகமையை புதுவை சுகாதாரத்துறை அணுகி புதுவை மாணவர்களின் நீட் தரவரிசை பட்டியலை பெற்று வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
Sorry, no posts matched your criteria.