India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுற்றுலா தலங்களில் ஒன்றான புதுச்சேரிக்கு, ஒரு சில பிரத்யேக உணவுகள் உள்ளது. புதுவை சுற்றுலா சென்றால் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா? பைனாப்பிள் ஷீரா, கேரளா போல புதுவையில் வைத்து செய்யப்படும் தேங்காய் லட்டு, பிரெஞ்ச் உணவான பிரெஞ்சு பேஸ்ட்ரி, மிக பேமஷான பழங்கள் ஐஸ்கிரீம், கடற்கரையை கலக்கும் வாழைப்பழ பஜ்ஜி, கல்கண்டு பொங்கள். இந்த ஸ்விட்ஸ்-ஐ அனைவரும் சுவைத்து மகிழ ஷேர் பண்ணுங்க!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி போக்குவரத்து மேலாண்மைத் துறை சார்பில் நேற்று (ஜூலை 4) முதல் திருச்செந்தூருக்கு தொடர்ச்சியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி போக்குவரத்து மேலாண்மை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தாண்டு, சொர்ணவாரி நெற்பயிர் பட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை விதை விதைத்து, பயிர் செய்த விவசாயிகள் இந்த மாதம் 15ம் தேதிக்குள், பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறலாம். இதுகுறித்து பொதுச் சேவை மையத்தில், தகவல்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.” என தெரிவித்துள்ளார். SHARE IT
புதுவை, சூரமங்கலம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் தனலட்சுமி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு, மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமானதால், இரவு நேரத்தில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மகன் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட செல்லூர் நல்லம்பல் சுரக்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று (ஜூலை 5) சனிக்கிழமை காலை 10.30 am முதல் 12.30 am வரை சுரக்குடி துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்சாரம் மேற்கண்ட நேரத்தில் இருக்காது என திருநள்ளாறு மின்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தாண்டு, சொர்ணவாரி நெற்பயிர் பட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை விதை விதைத்து, பயிர் செய்த விவசாயிகள் இந்த மாதம் 15ம் தேதிக்குள், பயிர்க் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.பொதுச் சேவை மையத்தில், தகவல்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.” என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பல் மருத்துவம் முதுகலை (எம்.டி.எஸ்.,) படிப்பில் சேர இந்தாண்டு நடைபெற்ற எம்.டி.எஸ்., நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களிடம் இருந்து அரசு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் என்.ஆர்.ஐ., இடங்களுக்கு நேற்று 3ம் தேதி முதல் வரும் 6ம் தேதிக்குள் www.centacpuducherry.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விடுமுறை தினமான புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புதுவை ஜிப்மரில் உள்ள புறநோயாளிகள் பிரிவு வரும் 12 ஆம் தேதி இயங்காது என்றும், திங்கட்கிழமையன்று நோயாளிகள் ஜிப்மர் வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவசரச் சிகிச்சை பிரிவு வழக்கம் போல இயங்கும் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)
▶️ தட்டாஞ்சாவடி, ரங்கசாமி – 9600999999 ▶️ மணவெளி, செல்வம் – 9843444799 ▶️ வில்லியனூர், இரா. சிவா- 9443117925 ▶️ லாஸ்பேட்டை, வைத்தியநாதன் – 9443384020 ▶️ திரு.பட்டினம், நாக தியாகராஜன் – 9865627559 ▶️ திருநள்ளாறு, PR.சிவா – 9865536699 ▶️ பாகூர், செந்தில் குமார் – 9600212345 ▶️முதலியார்பேட், சம்பத் – 9443287521. இந்த தகவலை ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.