India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடியை பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயன் பெறலாம். நடப்பாண்டில் பயிா் செய்த விவசாயிகள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
GHIBLI AI மூலம் அனிமேஷன் புகைப்படம் பகிர்வது அதிகரித்து வருகிறது. இந்த செயலிகளில் பயனாளர் பகிரும் புகைப்படங்களை சேகரித்து அதில் உள்ள முக அம்சங்கள் மெட்டா தரவுகளை சேமித்து வைத்துக் கொள்வதுடன் இந்த தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது என காரைக்கால் சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை உங்க அன்பிற்குரியவர்களுக்கு SHARE செய்து அவர்கள் பாதுகாப்பாக இருக்க உதவுங்கள்…
புதுவை சைபர் கிரைம் சீனியர் எஸ்பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெரியாத நபர்களிடமிருந்து whatsapp/Instagram/Facebook மூலம் ஏதேனும் செய்திகள் வந்தால் நம்ப வேண்டாம். போலியான உடனடி கடன் செயலிகளை நம்ப வேண்டாம். மும்பை காவல்துறை, CBI மற்றும் TRAI அதிகாரிகள் போன்ற அழைப்புகள் வந்தால், அதனை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் இந்த காளி கோயில் உள்ளது. புதுச்சேரியில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாகவும், வட இந்தியாவுக்கு அடுத்த இரண்டாவது காளி தலமாக விளங்குகின்றது. அரக்கனை கொன்ற காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட இங்கு அதிலிருந்து நிவர்த்தி பெற்றார். வழக்கு பிரச்சனைகள் உள்ளவர்கள், ஏவல், பில்லி, சூனியம் அனைத்தும் இங்கே வந்தால் தொலைந்து போகும் என்று கூறப்படுகின்றது.
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் CBSC பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. கடந்த கல்வி ஆண்டில் 9 மற்றும் 11-ஆம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த புதுச்சேரி கல்வித்துறை உத்திரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும் மறுதேர்வு நடைபெறும்.
புதுச்சேரி வழுதாவூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், தற்போது சம்பவ இடத்தில் கோரிமேடு போலீசார் மற்றும் டி.நகர் போலீசார்; வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு தீயணைப்பு வாகனங்களும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் பணிகளை நிரப்புவதற்காக வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி அன்று காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வுகள், நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகின்றது. செய்முறை தேர்விற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
புதுவை கண்டமங்கலம் அருகே நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது சோழர் கால கோயிலாகும். இங்குள்ள நவகிரகங்கள் கருவறையில் உள்ள சிவனை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றனர். இங்குள்ள சிவனை வணங்கினால் திருமணத் தடை, குழந்தைப் பேறு, வேலை வாய்ப்பு, இழந்த செல்வம் திரும்பப் பெறல், தம்பதி இடையே ஒற்றுமை, நோய் நொடியின்றி நீண்ட வாழ்வு பெறுதல், ஆகியவை அமையும் என்பது நம்பிக்கை. நண்பர்கள் & உறவினர்களுக்கு பகிரவும்
கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகுருநாதன் இவர் நேற்று வேகனார் காரில், கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் கார் சென்ற போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற டவேரா கார் அதிவேகமாக வந்த நிலையில், முன்னாள் சென்ற பைக்கின் மீதும், எதிரே வந்த வேகனார் கார் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் குழந்தைகள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.