Pondicherry

News August 6, 2025

பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுவை கூட்டுறவு மேலாண்மை நிலையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, ஓராண்டு கால முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளது. இப்பட்டய படிப்பு இரு பருவங்களாக நடக்கிறது. பயிற்சியில் சேர விரும்புவோர் www.tncu.tn.gov.in இணைய தள முகவரியில் வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்குள், ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News August 6, 2025

புதுவை: இந்தியன் வங்கியில் வேலை-இன்றே கடைசி வாய்ப்பு

image

புதுவை மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.12,000 முதல் 15,000 வரை வழங்கப்படும். வங்கியில் வேலை தேடும் நபர்களுக்கு இதனை SHARE செய்து உதவுங்கள்.

News August 6, 2025

புதுச்சேரி: சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ

image

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோயில் வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 10-கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் வராததால், சட்டப்பேரவையை எம்.எல்.ஏ நேரு நேற்று முற்றுகையிட முயன்றுள்ளார்.

News August 6, 2025

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயங்கள்

image

புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நேற்று பிறக்கும் குழந்தைகளுக்கு நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி எம்எல்ஏ சந்திர பிரியங்க, தமது சொந்த செலவில் தங்க நாணயங்கள் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News August 5, 2025

புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

image

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணிஉயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவையாகும். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

News August 5, 2025

புதுச்சேரி: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ சேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <>இங்கே <<>>கிளிக் செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்க்ளுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்

News August 5, 2025

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

image

திருக்கனுார் கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு அய்யனாரப்பன் கோவில் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், முருகேசன் மீது மோதி, நிற்காமல் சென்றுள்ளது. இதில், படுகாயமடைந்த முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News August 5, 2025

புதுவையில் 182 போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கல்

image

புதுச்சேரி காவல்துறையில் உள்ள போலீசாருக்கு பல்வேறு கட்ட பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது 32 போலீசாருக்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாகவும், 150 போலீசாருக்கு ஏட்டாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை அலுவலக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.

News August 5, 2025

புதுவை: ரயில்வேயில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

image

புதுவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள டிக்கெட் எழுத்தர், ரயில் கிளார்க், டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 30,000க்கும் மேலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படவுள்ளது. +2 மற்றும் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆக.30 முதல் செப். 29_க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும். ரயில்வே துறையில் பணியில் சேர காத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பை SHARE பண்ணுங்க!

News August 5, 2025

புதுவை: 10% இட ஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியீடு

image

புதுச்சேரியில் உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கான கோப்பு தயார் செய்து, லண்டன் சென்றிருந்த கவர்னருக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. கோப்பை ஆய்வு செய்த கவர்னர் கைலாஷ்நாதன், ஒப்புதல் வழங்கி, கடந்த வாரம் தலைமைச் செயலருக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து நேற்று (ஆக.04) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!