Pondicherry

News April 7, 2025

புதுச்சேரியில் பிரபல குற்றவாளி அதிரடி கைது

image

கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற ஸ்டிக்கர் மணி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்தார். இவர் நீதிமன்ற உத்தரவுப்படி காரைக்காலில் கையெழுத்திட வேண்டும். ஆனால் கையெழுத்து இட செல்லாமல் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த ஓதியஞ்சாலை போலீசார் ஸ்டிக்கர் மணியை மீண்டும் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

News April 6, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியான உடனடி கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதள குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங்கை நம்ப வேண்டாம்” என்றார்

News April 6, 2025

கடன் பெற்றவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிப்பதாக மிரட்டல்

image

புதுவையைச் சேர்ந்த விஜய் என்பவர் ஆன்லைன் மூலம் கடன்பெற்று அதை திருப்பியும் செலுத்தியுள்ளார். இதனிடையே மர்ம நபர் அவரை தொடர்பு கொண்டு, மேலும் பணம் தராவிட்டால் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி, ரூ.37,000 பணத்தை பெற்றதாக விஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News April 5, 2025

இடி, மின்னல், கடல் அரிப்பை மாநில பேரிடர்களாக அறிவிப்பு

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெப்ப அலை வீசுதல், கடல் அரிப்பு, இடி மின்னல் ஆகியவை புதுச்சேரி மாநிலத்தின் பேரிடர்களாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த மூன்று பேரிடர்களால் பாதிக்கப்பட்டு இறப்பு அல்லது காயம் அடையும் சம்பவங்களில் மாநில பேரிடர் மீட்பு நிதி விதிமுறைகளின்படி புதுச்சேரி யூனியன் பிரதேச பேரிடர் மீட்பு நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும்.

News April 5, 2025

புதுவை மின்துறையில் 177 காலிப்பணியிடங்கள்

image

புதுச்சேரி மின்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மின் துறையில் குரூப்-சி அரசிதழ் பதிவு பெறாத பதவியான, கட்டுமான உதவியாளர் பணிக்கு 177 பேரை நிரப்ப உள்ளதாக மின்துறை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஏப்ரல் 25ஆம் தேதி மதியம் 3 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். இதை நண்பர்கள், உறவினர்களுக்கு SHARE செய்யவும்

News April 5, 2025

புதுவை பல்கலைக்கழகத்தில் வேலை

image

புதுவை பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Associate-I பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாகவும், 22.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இது குறித்த மேலும் தகவலுக்கு பல்கலைக்கழகத்தை தொடர்ப்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க…

News April 5, 2025

ஓசியில் சிகரெட் – வியாபாரியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

image

புதுச்சேரி அடுத்த கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஹரிஷ், ஜிப்மர் மருத்துவமனை எதிரே டீ கடை வைத்துள்ளார். திலாஸ்பேட்டையைச் சேர்ந்த சசிக்குமார், குருமாம்பேட்டை கிருஷ்ணராஜ் ஆகியோர் மதுபோதையில் ஹரிஷ் கடைக்கு சென்று ஓசியில் சிகரெட் கேட்டுள்ளனர். ஹரிஷ் பணம் இல்லாது கொடுக்க முடியாது என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர். இந்நிலையில், போலீசார் நேற்று இருவரையும் கைது செய்துள்ளனர்.

News April 4, 2025

அக்னிவீர் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீா் பொதுப் பணி, தொழில்நுட்பம், எழுத்தா், ஸ்டோா் கீப்பா், தொழில்நுட்பம், டிரேட்ஸ்மேன் உள்ளிட்டப் பிரிவுகளுக்கு புதுச்சேரி மாவட்டம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

News April 4, 2025

புதுவை காவல் நிலையங்களில் நாளை மக்கள் மன்றம்

image

புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி, டிஐஜி சத்திய சுந்தரம் மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்க உள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News April 4, 2025

புதுவை சட்டத்துறையில் வேலைவாய்ப்பு

image

புதுச்சேரி அரசில் குறைந்தபட்சம் அமைச்சக உதவியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் இரண்டு கன்சல்டன்ட் பதவியை நிரப்ப உத்தேசித்துள்ளது. இந்த பதவிக்கு வரும் 12ஆம் தேதிக்குள் https://law.py.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என சட்டத்துறை சார்பு செயலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!