Pondicherry

News March 29, 2025

“விமான நிலையத்திற்கு பாரதிதாசன் பெயர்”

image

புதுச்சேரித் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை பாரதிதாசன் பெயரனும் பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவருமான கவிஞர் கோ.பாரதி ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார். அப்போது, “புதுச்சேரிக்கு தனிப்பெருமை ஏற்படுத்தித் தந்தவர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் புதுச்சேரி விமான நிலையத்திற்குப் பாவேந்தர் பாரதிதாசன் விமான நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும்” கோரிக்கை என்றார்.

News March 28, 2025

காரைக்காலில் இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் முதல்வர்

image

காரைக்கால் ஜமாத்தார்கள் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் காரைக்காலில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

News March 28, 2025

மது போதையை ஏற்றி தங்க நகைகள் திருட்டு

image

அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நபரிடம், பெண் ஒருவர், ஆசை வார்த்தை கூறி மது போதையை ஏற்றிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போனை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை உருளையான்பேட்டை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

News March 28, 2025

தேர்வு பயம் இல்லை – மாணவி பேட்டி

image

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்நிலையில் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள இமாக்குலேட் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவி சாதனா செய்தியாளர்களிடம் கூறும்போது, முதல் முறையாக பொது தேர்வு எழுத வந்துள்ளதாகவும், வினாத்தாளை பார்த்துவிட்டு பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதினால் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை எழுதிவிடலாம். இதனால் தேர்வு பயம் இல்லை என்றார்.

News March 28, 2025

5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

image

மடுகரையில் 2022இல் நடந்த இறுதி ஊர்வலத்தில், ஏரிப்பாக்கத்தை சேர்ந்த மதியழகனுக்கும் முத்துநகர் தீனதயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதியழகனை தீனதயாளன், அவரது நண்பர் சுதந்திரராஜ் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், தீனதயாளன், சுதந்திரராஜ் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

News March 28, 2025

புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்

image

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி, வரும் 15ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. பகுதியில் 20 தேர்வு மையங்கள், காரைக்கால் பகுதியில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன அமைக்கப்பட்டுள்ளன. பகுதியில் 146 தனியார் பள்ளிகளை பள்ளிகளைச் 7,278 பேரும், 573 தனித் தேர்வர்களும், காரைக்கால் பகுதியில் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 497 பேரும், 284 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

News March 28, 2025

“மகளிர் காவல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்”

image

புதுச்சேரி மாநிலத்தில் பெண்களின் மக்கள்தொகை வளர்ச்சியை கருத்தில்கொண்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் பெண் காவலர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா புதுச்சேரி சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.

News March 28, 2025

மக்களே உஷார்-யாரும் வெளியே வராதீங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் 98 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News March 28, 2025

பள்ளிக்கல்வித்துறையில் 114 பேர் இடமாற்றம்

image

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநர் வெர்பினா ஜெயராஜ் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் தலைமை ஆசிரியர்கள் (கிரேடு-1) குணசுந்தரி உறுவையாறு அரசு உயர்நிலைப் பள்ளியிலிருந்து கொம்பாக்கம் பள்ளிக்கும், அரிவரதன் காரைக்கால் டி.ஆர்.பட்டினம் அரசு பெண்கள் பள்ளியிலிருந்து, மடுகரை வி.எஸ்.ஆர். பெண்கள் பள்ளிக்கும் மேலும் தலைமை ஆசிரியர்கள் (கிரேடு-2) உள்ளிட்ட 111 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 27, 2025

புதுவையில் ராஜராஜ சோழன் கட்டிய கோயில் தெரியுமா?

image

புதுவை மதகடிப்பட்டில் குண்டாங்குழி எனும் குளக்கரையில் அமைந்ததுள்ளதால் இங்குள்ள மூலவர் குண்டாங்குழி மகாதேவர் என அழைக்கப்படுகிறார். அழகான கற்றளியாக விளங்கும் இக்கோயில் கி.பி. 985-இலிருந்து 1016 வரை ஆட்சி செய்த முதலாம் ராசராசனால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. இங்கு முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ அரசர்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. SHARE செய்யவும்

error: Content is protected !!