India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரிக்கு இன்று (ஆகஸ்ட் 7) வருகை தந்த புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை செந்தர்ராஜன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் ராமலிங்கம் வரவேற்றனர். புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
புதுவையில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த முகமது கௌஸ் என்பவருக்கு முருகனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்பதே வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. 1970ஆம் ஆண்டு அன்றைய கவர்னருடன் சேர்ந்து கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார். பல இடையூறுகள் வந்தாலும் 1977ஆம் ஆண்டு கோயிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்தி முடித்தார். இக்கோயிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் கௌசிக பாலசுப்பிரமணியர் கோயில் என பெயர் வைத்தார். ஷேர் செய்யுங்க!
பிரதம மந்திரி சூர்யா கர் மானியத் திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்படுகிறது. இத்திட்டம் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமான ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்கும் குடும்பத்தினர் இங்கு <
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்கம் இணை இயக்குனர் சிவகாமி நேற்று (ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த கல்வியாண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பித்து கலந்தாய்வின் போது இடம் கிடைக்காமல் பலர் உள்ளனர். இன்று, நாளை மற்றும் 11ம் தேதிகளில் குருசுக்குப்பம் அரசு பள்ளிகயில் கலந்தாய்வு நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி JIPMER மருத்துவமனையில் காலியாக உள்ள Nurse, Social Worker, Psychologist பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு மாதம் ரூ.38,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் இந்த <
புதுச்சேரியில், யோகாசன சாம்பியன்ஷிப் 2025 போட்டி வரும் 10ம் தேதி லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி, 10, 14, 18, 28, 35, 45 மற்றும் 55 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில் நடக்க இருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க <
பாண்டிச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள பல்கலைக்கழக சமூகக் கல்லூரி 2025–26 கல்வியாண்டிற்கான வரையறுக்கப்பட்ட காலியிடங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கான ஸ்பாட் அட்மிஷன்களை 06.08.2025 முதல் 13.08.2025 வரை நடத்துகிறது. கிடைக்கக்கூடிய திட்டங்கள் மற்றும் சேர்க்கை வழிகாட்டுதல்கள் பற்றிய விவரங்கள் pucc.edu.in என்ற கல்லூரி வலை போர்ட்டலில் வழங்கப்பட்டுள்ளன.
BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு 1,500ரூ முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!
வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேதும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்களில் போனில் இருந்தே விண்ணப்பிக்க இங்கே <
புதுவை காலாப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 7) பராமரிப்பு வேலை நடைபெறுவதால் பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஸ்டடி பள்ளி, நவோதயா வித்தியாலயா பள்ளி, சட்டக் கல்லூரி, அம்மன் நகர், டேவ் பள்ளி, பெரியகா லாப்பட்டு உட்பட்ட பகுதியில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.