Pondicherry

News August 10, 2025

புதுச்சேரி: ரூ.2,15,900 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!

image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Registrar, Computer Programmer பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.44,900 – 2,15,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகிற செப்டம்பர் 28ம் தேதிக்குள் தகவல்களை பூர்த்தி செய்து Senior Administration Officer, JIPMER, Puducherry என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News August 10, 2025

புதுச்சேரி: கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு!

image

புதுச்சேரி பள்ளிக்கல்வி துறை சார்பில், நடைபெறவுள்ள கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு வரும் 12ம் தேதி காலை 8 மணிக்கு லாஸ்பேட்டை, பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவ, மாணவிகள் வரும் 25 மற்றும் 28 ம் தேதிகளில் புனே, பலேவாடியில் நடக்கும் இரண்டாம் கட்ட வீரர்கள் தேர்வில் பங்கேற்பர். 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்க தகுதியானவர்கள். SHARE IT

News August 10, 2025

புதுச்சேரி: தமிழ்நாடு கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும்

image

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் தழைக்க மீண்டும் தமிழ்நாடு கல்விக் கொள்கையை புதுச்சேரி அரசு பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையேல் மக்கள் திரள் போராட்டத்தை தி.மு.கழகம் முன்னெடுக்க நேரிடும் என்றும் புதுச்சேரி அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 9, 2025

புதுவை மாவட்ட காவல் நிலைய தொடர்பு எண்கள் (பாகம் 1)

image

▶️ கிருமாம்பாக்கம் – 9489205183
▶️ கரையம்புதூர் – 9489205177
▶️ பாகூர்- 9489205168
▶️ தவளக்குப்பம் – 9489205163
▶️ அரியாங்குப்பம் -9489205155
▶️ வில்லியனூர் – 0413 266 6321
▶️ லாஸ்பேட்டை- 0413 223 4097
இந்த தகவலை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மறக்காமல் SHARE செய்யவும்!

News August 9, 2025

புதுவையில் நூற்றாண்டு பழமையான மணிக்கூண்டு !

image

பிரெஞ்சு ஆட்சியில், புதுச்சேரியின் பெரிய வணிகரான லட்சுமணசாமி செட்டியார், ஒரு மணிக்கூண்டை அமைக்க விரும்பினார். இது பற்றி பிரெஞ்ச் அரசிடமும் தெரிவித்தார். 1892 ஆண்டு மைசூர் மன்னர் புதுவைக்கு வந்தார். அப்போது அவரே தங்க சொல்லுறில் சுண்ணாம்பு கலவை வைத்து மணிக்கூண்டு அமைக்க அடிக்கல் நாட்டினார். கடந்த 1921இல் 25 அடி உயரத்தில் மூன்று மாடிகளுடன் இந்த மணிக்கூண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதை ஷேர் செய்யுங்க !

News August 9, 2025

புதுச்சேரியில் இலவச இரத்ததான முகாம்

image

புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் வில்லியனூர் சுல்தான்பேட்டை முத்துக் குமரன் மஹாலில் மாபெரும் இலவச இரத்ததான முகாமை இன்று (ஆகஸ்ட் 9) தொடங்கியது. இந்த முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர்கள் தலைமை தாங்கினார்கள். மண்டல உதவி ஆளுநர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.

News August 9, 2025

டி ஐ ஜி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

image

புதுச்சேரி காவல்துறை தலைவர் டிஜிபி அறிவுறுத்தல் படி, புதுச்சேரி உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நடைபெற்றது. அதன்படி, திருபுவனை காவல் நிலையத்தில் டிஐஜி சத்திய சுந்தரம் தலைமையில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

News August 9, 2025

முதல்வர் ரங்கசாமி பேட்டி

image

சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். இதில் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் புதுச்சேரி அரசுக்கு ரூ.4750 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் நடைபெறவுள்ள பணிகளுக்கு இரண்டு தவணையில் இந்த நிதி புதுச்சேரி அரசுக்கு கிடைக்கும். 50 ஆண்டுகள் கழித்து இந்த கடனை திருப்பி செலுத்தப்படும். மிக குறைந்த 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை வட்டியில் இந்த நிதியுதவி கிடைக்கிறது என்றார்.

News August 9, 2025

புதுவை: ரூ.1,42,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க !

News August 9, 2025

புதுவை மக்களே மானியம் வேண்டுமா? இத பண்ணுங்க!

image

புதுச்சேரியில் ஆழ்துளை கிணறு அமைக்கவும், நீர்மூழ்கி மோட்டார் பொருத்தவும் வழங்கப்படும் மானியம் பெறுவதற்கு தற்போதுள்ள நில உச்சவரம்பு பொது விவசாயிகளுக்கு 1% ஏக்கரில் இருந்து 1 ஏக்கராகவும். அட்டவணை இன விவசாயிகளுக்கு 1 ஏக்கரில் இருந்து ½ஏக்கராகவும் குறைக்கப்படுகிறது. எனவே இத்திட்டத்தில் உழவர் உதவியகங்கள் அல்லது https://agri.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!