India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மக்களுக்கு குட் நியூஸ். இனி ரேஷன் அட்டை சேவைகளை வருகிற ஆக.18ம் தேதி முதல் பொதுசேவை மையங்கள் மூலம் பெற முடியும். இதனை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர்ப் சத்யமூர்த்தி செய்திக்குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளார். இனி சுலபமாக குடும்ப அட்டைகளை பெறலாம்..! இதை அனைவர்க்கும் SHARE பண்ணுங்க..!
புதுச்சேரி, மணவெளியில் உள்ள அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றால் அனைத்து மாணவர்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10,000 வழங்கப்படும் என சபாநாயகர் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தவளக்குப்பம் பள்ளியில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூபாய் 10,000 வழங்கினார்.
புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள 446 செவிலியர்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கீகரிப்பட்ட பல்கலைகழகத்தில் B.Sc Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக மாதம் ரூ.34,800 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் jipmer.edu.in என்ற இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து இன்றைக்குள் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் 7 சிறுமி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்துவந்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்ததன் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தலைமறைவான வெங்கடாசலத்தை தேடி வருகின்றது.
புதுச்சேரியில் ரெஸ்ட்டோ பாரில் நடைபெற்ற மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் தமிழக வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது இது குறித்து அன்பழகன் இன்று (ஆக.10) செய்தியாளர்களிடம் கூறும்போது இளைஞர் படுகொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுத்து பெரிய கடை காவல் நிலையத்தில் உள்ள அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
புதுச்சேரியில் உள்ள புதுக்குப்பம் கடற்கரையில் அமைந்துள்ள கர்ணேஷ்வர் நடராஜர் கோயில், பிரமிடு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது எகிப்திய பிரமிடுகள் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய கோயில் பாணியின் கலவையாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் இருக்கும் ஏழு படிகள் உணர்தலைக் குறிப்பதாக கூறுகின்றனர். இக்கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனநிம்மதி கிடைக்கும் என நம்பபடுகிறது. இதனை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பள்ளிக்கல்வி துறை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு வினாடி வினா போட்டியை நடத்தினர். புதுச்சேரியில் நடந்த போட்டியை, திட்ட இயக்குனர் அருள்விசாகன், பள்ளிக் கல்வி துறை முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் துவக்கி வைத்தனர். இதில் அமலோற்பவம் லுார்து அகாடெமி குழு மாணவர்கள் ஸ்ரீராம், சதீஷ்குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Registrar, Computer Programmer பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.44,900 – 2,15,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் இந்த <
புதுச்சேரி பள்ளிக்கல்வி துறை சார்பில், நடைபெறவுள்ள கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு வரும் 12ம் தேதி காலை 8 மணிக்கு லாஸ்பேட்டை, பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவ, மாணவிகள் வரும் 25 மற்றும் 28 ம் தேதிகளில் புனே, பலேவாடியில் நடக்கும் இரண்டாம் கட்ட வீரர்கள் தேர்வில் பங்கேற்பர். 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்க தகுதியானவர்கள். SHARE IT
Sorry, no posts matched your criteria.