India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாட்கோ சார்பாக தரமணியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த பி.எஸ்.சி. விருந்தோம்பல் ஓட்டல் பட்டப்படிப்பு, உணவு தயாரிப்பு பட்டய படிப்பு, மிட்டாய் துறையில் பட்டயப்படிப்புபில் சேர விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆலத்தூர் ஒன்றியம் நாரணமங்கலம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் எம்பி அருண் நேரு, எம் எல் ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 8.5 ஏக்கர் பரப்பளவில் 1.15 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் எம்பி அருண்நேரு, எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் இன்று பாடாலூரில் தொடங்கி வைத்தனர். இதில் வேம்பு, புளி மகிழம் நீர்மருது நாவல் இலுப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது.
பெரம்பலூரில் நேற்று புதிதாக பதவியேற்ற எஸ்பி ஆதர்ஸ் பச்சேரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்படுவார்கள். போதை பொருள் விற்பனை, கடத்தல் சம்பவம் தடுக்கப்படும் என தெரிவித்தார்.
தனியார் வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து டிஎஸ்பி வளவன் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் சமூக நீதி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விதிகள், குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான விழிப்புணர்வு, சைபர் குற்றங்கள், கஞ்சா போன்ற போதை பொருட்களை உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறு சிறு (ம) நடுத்தர தொழில் பிரிவுகளுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 19.8.20 24 முதல் 06.09.2024 வரை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக திருச்சி கிளை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர்கள் வருகை தந்து தொழில் கடன் மற்றும் அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 0431- 2460498, 9443110899 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு நகர்வு தாமதமானதை தொடர்ந்து
ஜுலை மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்கும் போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் ஆகஸ்ட் 14ஆம் தேதி இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் நாளை (15.08.2024) காலை 09.05 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய கொடி ஏற்றிவைக்க உள்ளார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் எம்பி, எம்எல்ஏ, மாவட்ட எஸ்பி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதி கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் எம்.பி அருண்நேரு, எம்.எல்.ஏ.பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளராக சியாமளா தேவி பதவி வகித்து வந்த நிலையில் தற்போது, பெரம்பலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆதார் பசேரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று கூறினார். மேலும் அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.