India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெரம்பலூர்-18 மி.மீ., கிருஷ்ணாபுரம்-8 மி.மீ., வி.களத்தூர்-15 மி.மீ., தழுதாழை-99 மி.மீ., வேப்பந்தட்டை-58 மி.மீ., புதுவேட்டக்குடி-5, பாடாலூர்-35 மி.மீ., செட்டிகுளம்-3 மி.மீ. ஆகிய பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது.
பெரம்பலூர் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவ – மாணவிகளுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் அசல் தகுதி சான்றிதழ் உடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் நேரடி தேர்வு நடைபெறுகிறது. காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி 01.01.2025 என்ற நாளை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக சிறப்பு திருத்தப்பணிகள் 20.08.2024 முதல் துவங்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட எஸ்பி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்தும், புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நேற்று இரவு 9:30 மணி அளவில் திருவண்ணாமலை நோக்கி கிளம்பிய அரசு பேருந்து இன்று காலை 6:45 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்த போது பேருந்து நடத்துனர் கவுண்டப்பன் தேனீர் சாப்பிட சென்றபோது அவரது பையில் இருந்த பயணிகளிடம் பயணச்சீட்டுக்காக பெற்ற பணமான ரூ. 27,300 கொள்ளை போனதாக கோரி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திமுக நிர்வாகிகளான, பிம்பலூரை சேர்ந்த வனிதா, திருவாளந்துறையை சேர்ந்த மோகன் ஆகியோர், கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 2023-ம் ஆண்டில் 2 நபர்களிடம் ரூ.4.40 லட்சம் பெற்றுள்ளனர். மேலும் வேலை வாங்கி தராததால் பணம் அளித்தவர்கள் வற்புறுத்தலின் பேரில் குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளனர். ஆனால் மீதி தொகை வழங்காததால் திமுக நிர்வாகிகள் மீது குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தி பெடரல் மற்றும் வேலவன் ஹைபர் மார்க்கெட் சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி வீரர் எஸ்.கலைச்செல்வன் 10 கிலோ மீட்டர் தொலைவில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பதக்கமும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெரம்பலூர், எறையூர், கிருஷ்ணாபுரம், வி.களத்தூர், தழுதாழை, வேப்பந்தட்டை, அகரம், சீகூர், லப்பைகுடிகாடு, புதுவேட்டைகுடி, பாடாலூர், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதன் மொத்த அளவு 284 மி.மீ. மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 25.82 மி.மீ. மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் கபருநிஷா என்பவர் இன்று மாலை கண்ணன் என்பவரது வயலில் பசு மாட்டை மேச்சலுக்கு விட்டுவிட்டு சென்றுள்ளார் அப்பொழுது திடீரென பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தினால் மூன்று வயது மதிக்கத்தக்க பசுமாடு இடிமின்னல்தாக்கிஇருந்துள்ளது தகவல் அறிந்த மாட்டின்உரிமையாளர்வந்துபார்த்த பொழுது வயலில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனை தொடந்து, இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.