India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஆக.23 ஆம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். 25க்கும் மேற்பட்ட பிரபல தனியார் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் நூலகத்தில் உள்ளதா என்று கேட்டறிந்த அமைச்சர், நூலகத்தில் வாசகர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார்.
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் நூலகத்தில் உள்ளதா என்று கேட்டறிந்த அமைச்சர், நூலகத்தில் வாசகர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் பங்கேற்கலாம். 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்டம் மண்டல (ம) மாநில அளவில் நடைபெற உள்ளது இப்போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் ஆகஸ்ட் 25 ஆகும். www.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. என்.அருண் நேருவை பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள திமுக அலுவலகத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா -வை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்னை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் இந்நிகழ்வின் போது திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கல்கத்தா மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி வேண்டி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குருபிரசாத் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சரவணன் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு தனியார் மஹாலில் இன்று “கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் கிராமப்புற வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ்” ரூபாய் 47.04 கோடி மதிப்பீட்டில் 2006 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் வழங்கினார். மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 5 பிரிவுகளின் கீழ் மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவில் நடைபெறுகிறது. என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு 7401703516, 9514000777 என்ற எண்ணை அழைக்கலாம் என்று ஆட்சியரகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.