India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வந்து அவர்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றனர். அதன் பிறகு, இரண்டு மாற்றுத்திறனாளிக்கு 9000 மதிப்புள்ள சக்கர நாற்காலியில் வழங்கினார். அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி, மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் சிறப்புக் கல்விக் கடன் முகாமானது செப்.3, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி, செப்.4, ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், செப்.5, ரோவர் பொறியியல் கல்லூரி, செப்.6 வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகம், செப்.10 ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
பெரம்பலூா் காவல் ஆய்வாளா் சதீஸ்குமாா் தலைமையிலான போலீசார், நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். வடக்குமாதவி மேட்டுத் தெருவில் மோட்டாா் சைக்கிளில் வந்தவரை பிடித்து சோதனையிட்டபோது 2 கிலோ போதைப் பொருள்கள் வைத்திருந்த ஷேக் அப்துல்லாவை (50) கைது செய்தனர். இதேபோல, சிறுவாச்சூா் அரசு பள்ளிக்கு அருகே இருந்தவரை பிடித்து சோதனையிட்டபோது, அவர் வைத்துஇருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இருவரை கைது செய்தனர்.
பெரம்பலூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. சமூக நல அலுவலர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், கல்வி, குழந்தை திருமண தடுப்பு போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து பயிற்சி வகுப்பில் எடுத்துரைக்கப்பட்டன.
பெரம்பலூரில் புத்தகக் கண்காட்சி நடத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாசிப்பாளா்கள் மற்றும் பொதுமக்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. பெரம்பலூா் நகராட்சி மைதானத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. பின்பு கொரோனா காரணமாக 4 ஆண்டுகள் நடைபெறவில்லை. கடைசி கண்காட்சி 2023-இல் நடைபெற்று ரூ. 1.12 கோடி மதிப்பீட்டிலான புத்தகங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூா் மாவட்டத்தில் காரில் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட தேனி மாவட்டம், உத்தமபாளையம் உலகத் தேவா் தெருவைச் சோ்ந்த மதன் (29), பாலா (28), மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தெய்வம் மகன் அஜீத் (27), பிரதீபன் மகன் வெள்ளையன் பிரபு (27) ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
பெரம்பலூர் மாவட்டத்தில் காரில் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மதன், பாலா, அஜித், பிரதீபன் வெள்ளையன் பிரபு ,ஆகிய நான்கு நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட எஸ் பி பரிந்துரை செய்தார், பரிந்துரை ஏற்ற மாவட்ட ஆட்சியர் குற்றவாளிகளை கொண்ட தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (ஆக 30)நேற்று மாலை 3.30 மணி அளவில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் கருவிகள் செயல்பாடு (ம) பராமரிப்பு குறித்த முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, வேளாண்மை துறை இணை இயக்குனர் கீதா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அசோக்குமார், உதவி செயற்பொறியாளர் சிவபிரகாஷ், வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம், செப். 3ம் தேதி தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்லூரியிலும், செப்-5ம் தேதி ரோவர் கல்லூரியிலும், செப்-10ம் தேதி ராமகிருஷ்ணா கல்லூரியிலும், முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9442271994 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட சுற்றுப்பகுதியில் நேற்று மழை பெய்தது. அதன்படி பெரம்பலூர், எறையூர், கிருஷ்ணாபுரம், வி.களத்தூர், தழுதாழை, வேப்பந்தட்டை, லப்பைகுடிகாடு, பாடாலூர், செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. சராசரியாக இதன் மொத்த அளவு 151.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.