India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது இந்த சிறப்பு மனு முகாமில் 53 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் என பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நல குழுவில் உதவி கணினி இயக்குனர் பணிக்கு விண்ணப்பிக்கலாமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க +2 அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய முறையில் பணியமர்த்தப்படுவர். இப்பணிக்கு வரும் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை நல குழுவில் காலியாக உள்ள உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப் பதாரர்கள் Perambalur.nic.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 16.9.2024 தேதிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு 164, 2வது தளம் MMபிளாசா திருச்சி ரோடு பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்பலாம் என கலெக்டர் தகவல்
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை பெற்ற துங்கபுரம் அ.மே.பள்ளி ஆசிரியர் ஜெ.ரவிச்சந்திரன், நக்கசேலம் அ. மே.பள்ளி ஆசிரியர் மெ.ஓம்.பிரகாஷ், தேனூர் அ. மே.பள்ளி ஆசிரியை க.சித்ரா, கொத்தவாசல் ஊ.ஒ.ந.பள்ளி ஆசிரியர் சி.இளவழகன், பிரம்மதேசம் தலைமை ஆசிரியை கே.பிரேமலதா, மா. ந.பள்ளி தலைமை ஆசிரியர் சி.சாம்பசிவம் ஆகியோர் தங்களது நல்லாசிரியர் விருதினை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர், தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நீதிமன்ற உத்தரவுப்படி தமக்கு வழங்கிட வேண்டுமென்று, அரை நிர்வாணத்தில் உடலில் நாமம் அணிந்து கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். உடனடியாக போலீசார் தடுத்து நிறுத்தினர். பிறகு மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டம் பெரம்பலூர் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.
பெரம்பலூர் மாவட்டம் 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 05 வாக்குச்சாவடிகள் மற்றும் 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் 15வாக்குச்சாவடிகள் கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின் 16.09.2024க்குள் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூா் மாவட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை (செப். 10 ) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின் நுகா்வோா்களின் குறைகளை தீா்க்கும் வகையில், மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம, மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்பட உள்ளது. தகுதியான மாணவர்கள் Screening test மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com முகவரியில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் இன்று தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்பட உள்ளது. தகுதியான மாணவர்கள் Screening test மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com முகவரியில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் இன்று தகவல்
Sorry, no posts matched your criteria.