India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசு தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் நாள் அன்று ஆண்டுதோறும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற செப்.17 ஆம் நாள் செவ்வாய் கிழமை அன்று மிலாடி நபி அரசு விடுமுறை நாளாக இருப்பதனால் வேலை நாளான இன்று (16.09.2024) சமூக நீதி நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் ஏற்கப்பட்டது.
பெரம்பலூரில் முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டியில் பெரம்பலூர் தந்தை ரோவர் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.வரதராஜன் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பெரம்பலூர் தனியார் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம். இதில் நிறுவனத் தலைவர் கிறிஸ்டோபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. செயலர் முனைவர் மித்ரா முன்னிலை வகித்து ஓணம் பண்டிகையின் சிறப்பை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் வண்ண வண்ண பூக்களால் கோலமிட்டு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு எனும் தலைப்பில் நடைபெறும் குறும்பட போட்டியில் பங்கேற்க, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் செப். 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10000, 2 ஆவது பரிசாக ரூ. 7000, 3 ஆவது பரிசாக ரூ. 5000 வழங்கப்படும். 5 நிமிடத்துக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி 2 மற்றும் 2A தேர்வுகள் இன்று நடத்தப்பட்டது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ்பச்சாவ் நேரில் பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வினை 5,938 நபர்கள் தேர்வெழுதினர்.
குன்னம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வரும் 18ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதில் குன்னம் வட்டத்திற்குட்பட்ட கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் கலெக்டரிடம் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளிக்குமாறு கலெக்டர் நேற்று அறிவித்தார்.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி, நாளை(14/9/24) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து, முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பை தேசிய மக்கள் நீதிமன்றம் (NATIONAL LOK ADALAT) செய்ய உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்கு மற்றும் வங்கி கடனுதவி ஆகிய வழக்குகளில் தீர்வு கண்டு சமரசமாக செல்லாம்.
ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, திம்மூர் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹96.37 லட்சம் மதிப்பீட்டில் திம்மூர் முதல் கண்ணனூர் வரை 3 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளின் தரம் தொடர்பாக இன்று 13.09.2024 மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஜெமின் பேரையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹.13.49 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செடிகள் வளர்க்கும் நாற்றாங்கால் மையத்தை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று 13.09.2024 பார்வையிட்டு ஆய்வு செய்தார். துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில் சிறப்பு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் மற்றும் வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது. வாக்குச்சாவடி இடங்கள் சில பழுதடைந்து இருப்பதால் மாற்றி அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. இதில் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.