India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மலையாளப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கிட ஏதுவாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் சமுதாய கூடத்தின் சாவியினை செப்டம்பர் மூன்றாம் தேதி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
வேப்பந்தட்டை வட்டம், அயன் பேரையூரில் வருகின்ற செப்-11 ஆம் தேதி, மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. எனவே அயன்பேரையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் தங்களது கோரிக்கைத் தொடர்பான மனுக்களை அயன் பேரையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் ராஜா தியேட்டர் அருகில் விநாயகர் சதுர்த்தி விழா விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில், FREE PALESTIN என பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கும், பாலத்தீனுக்கும் என்ன தொடர்பு உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவில் கலவரத்தை தூண்டும் வகையில் பேனர் வைத்துள்ளதாக இந்து முன்னணியினர் குற்றம்சாட்டுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்யப்படும் விநாயகர் சிலைகள் தூய களிமண்ணால் செய்யப்பட வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட சார் ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியதை கடைப்பிடிக்க வேண்டும். தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து சார் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் மற்றும் மங்களமேடு துணை மின் நிலையங்களில் நாளை (செப்.4) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், முருக்கன்குடி, நகரம், நமையூர், எறையூர் பிம்பலூர், பசும்பலூர், சின்னாறூ, பெரம்பலூர், ஆடுதுறை, கழனிவாசல் உள்ளிட்ட பிறபகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வந்து அவர்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றனர். அதன் பிறகு, இரண்டு மாற்றுத்திறனாளிக்கு 9000 மதிப்புள்ள சக்கர நாற்காலியில் வழங்கினார். அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி, மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் சிறப்புக் கல்விக் கடன் முகாமானது செப்.3, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி, செப்.4, ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், செப்.5, ரோவர் பொறியியல் கல்லூரி, செப்.6 வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகம், செப்.10 ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
பெரம்பலூா் காவல் ஆய்வாளா் சதீஸ்குமாா் தலைமையிலான போலீசார், நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். வடக்குமாதவி மேட்டுத் தெருவில் மோட்டாா் சைக்கிளில் வந்தவரை பிடித்து சோதனையிட்டபோது 2 கிலோ போதைப் பொருள்கள் வைத்திருந்த ஷேக் அப்துல்லாவை (50) கைது செய்தனர். இதேபோல, சிறுவாச்சூா் அரசு பள்ளிக்கு அருகே இருந்தவரை பிடித்து சோதனையிட்டபோது, அவர் வைத்துஇருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இருவரை கைது செய்தனர்.
பெரம்பலூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. சமூக நல அலுவலர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், கல்வி, குழந்தை திருமண தடுப்பு போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து பயிற்சி வகுப்பில் எடுத்துரைக்கப்பட்டன.
பெரம்பலூரில் புத்தகக் கண்காட்சி நடத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாசிப்பாளா்கள் மற்றும் பொதுமக்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. பெரம்பலூா் நகராட்சி மைதானத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. பின்பு கொரோனா காரணமாக 4 ஆண்டுகள் நடைபெறவில்லை. கடைசி கண்காட்சி 2023-இல் நடைபெற்று ரூ. 1.12 கோடி மதிப்பீட்டிலான புத்தகங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.