India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்குமாதவிரோட்டில் வசிக்கும் மக்கள் பொங்கலின் முதல் நாளான இன்று போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். போகி என்றால் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு பழைய பொருட்களை எரித்து, அருகில் இருக்கும் வீட்டாருக்கு போகியின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குழந்தைகள் அதனை கண்டு மகிழ்ந்தனர்.
பெரம்பலூரில் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் தீவனப் பயிர்கள் விதை உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பு குறித்த இலவச பயிற்சி வகுப்பு மே.22ஆம் தேதி நடக்க உள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த இலவச பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயரை 04328- 293251 என்ற எண்ணில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை ஷேர் பண்ணுங்க.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு நேற்று (ஜன.11) காலை முதலே வாகன நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் விழா காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் பெரம்பலூரில் அதிக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மக்கள் இரு சக்கர வாகனங்களிலும் மற்றும் கார்களிலும் தொடர்ந்து வருவதால் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூரில் ஜன.31 முதல் பிப்.9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 9வது ஆண்டு புத்தகத் திருவிழாவில் சிறந்த வாசகராக தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.10000 பரிசு தொகையாக வழங்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். மாணவர்களின் வாசிக்கும் திறனையும், எழுத்தர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஊக்குவிக்கவும் இதன் நேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அம்பிகாபதி சீனியர் நீச்சல் போட்டியிலும், இதே போல் மாற்றுத்திறனாளி ஜீவா சப்-ஜூனியர் நீச்சல் பிரிவிலும் தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் வென்றனர். இவர்களை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர் பந்தல் அருகே,இன்று (ஜன-11) மாலை -6.30 மணியளவில், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்மித் (வயது16) மற்றும் காரில் வந்த துர்கா (வயது 35) என்பவரும் இறந்துவிட்டனர். மேற்படி விபத்தில் காயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் திருவள்ளுவர் தினம் ஜன.15 மற்றும் குடியரசு தினம் ஜன.26 ஆகிய 2-நாட்கள் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மாணவ, மாணவியர் விடுதிகளில் உள்ள 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி பயில்வதற்கு வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முன்னிலையிலும் அரசு விடுதி மாணவர்களுக்கு சிறப்பு நெறிமுறை வழங்கப்பட்டது.
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் நியூ காலனியை சேர்ந்த பிரபு என்பவர் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று முன்தினம் (ஜன.09) கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கேமரா உள்ளிட்ட கருவிகள் மற்றும் ரூ.2500 பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது சிசிடிவி கேமரா மூலமாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து தற்போது பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.