India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் மருத்துவமனையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்காக இன்று நடத்தப்பட உள்ள இலவச மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நாளை தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு நேரடியாக சந்திக்கும் தனியார் துறை சிறு வேலை வாய்ப்பு முகாம் நாளை ( 20/09/2024) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். முகாம் காலை 10 மணி அளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 2025 ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் இணையதளத்தில் செப்டம்பர் 30ம் தேதி மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 25 க்கும் மேற்பட்ட நிறுவனகங்கள் கலந்து கொள்ளவுள்ளன. 10, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
குன்னம் தாலுகாவிற்குட்பட்ட, முருக்கன்குடி அரசு மருத்துவமனையில் இன்று (18.09.2024) மாலட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், நேரில் ஆய்வு மேற்கொண்டு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் சேசு மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் குன்னம் வட்டத்திற்குட்பட்ட சிறுமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட முருக்கன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று மனு மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நல சங்கம் சார்பில் பணி ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் ஆகியும் ஓய்வு கால பண பலன்களை வழங்காமல் காலம் கடத்துவதை கண்டிப்பதாக கூறி பெரம்பலூர் தீரன்நகர் முன்பு நேற்று சாலையின் இருபுறமும் சங்கத்தினர் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 72 பேர் கைது செய்யப்பட்டனர்.
மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் குறைகளை தீர்க்க தமிழ்நாடு அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் குன்னம் வட்டத்தில் இன்று (18.09.2024) நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சிறுமத்தூர் ஊராட்சியில் பொதுமக்களின் தேவைகள் கோரிக்கைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்தல் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.
Sorry, no posts matched your criteria.