Perambalur

News September 25, 2024

பெரம்பலூர் போலீசார் அதிரடி சோதனை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றம் நடவாமல் தடுக்கும் முன்னேற்றத்திற்கு நடவடிக்கையாக மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி ஏ.டி.எஸ்.பி மதியழகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ஆரோக்யராஜ் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகள், சந்தேக நபர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

News September 24, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் (குரலிசை, பரதநாட்டியம், ஓவியம்,கிராமிய நடனம்) செப்டம்பர் 29ஆம் தேதி பெரம்பலூர் மதனகோபாலபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் 9659507773 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் இன்று பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்க வைக்க உள்ளதாக என மாவட்ட நிர்வாகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது.

News September 23, 2024

பெரம்பலூர் காங்கிரஸ் கட்சியினர் எஸ்பியிடம் மனு

image

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாகவும், அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பேசி வரும் BJP தலைவர் தர்விந்தர் சிங் மர்வா, உத்திரபிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, தமிழ்நாடு பிஜேபி பொறுப்பு குழு தலைவர் H.ராஜா ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி எஸ்பி யிடம் மனு அளித்தனர்.

News September 23, 2024

பெரம்பலூர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 446 மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 446 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News September 23, 2024

பெரம்பலூர் அருகே காட்டில் வேட்டையாடியவர்கள் கைது

image

பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு செஞ்சேரி காப்பு காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக 6 போ் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது, எறும்பு தின்னியை விற்பனை செய்வதற்காக அவர்கள் வேட்டையாடி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 22, 2024

பெரம்பலூர் அருகே சட்ட விரோத மதுபான விற்பனை

image

பெரம்பலூா் அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனர. வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் பாளையம் கிராம பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி, கை.களத்தூா் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, மருதை மகன் சின்னசாமி (67), தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

News September 22, 2024

குன்னம் அருகே இரு சக்கர வாகனம் விபத்து

image

குன்னம் அருகேயுள்ள சித்தளி கிராமம், மேற்கு தெருவைச் சோ்ந்தவா் ராமா் மகன் மகேந்திரன் (24). இவர் பெரம்பலூர் தனியாா் டயா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் குன்னத்திலிருந்து சித்தளி கிராமத்துக்குச் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போதுஅரியலூருக்கு சிமெண்ட் ஏற்றச்சென்ற லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News September 21, 2024

பெரம்பலூா் அருகே 262 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

image

பெரம்பலூா் அருகே பேரளி கிராமத்தில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்படி, மருவத்தூா் காவல் நிலைய எஸ் ஐ தலைமையில் பல்வேறு கடைகளில் நேற்று சோதனை செய்தனா். இதில் அய்யாசாமி (70) என்பவா் தனது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் ரூ. 1.61 லட்சம் மதிப்பிலான 262 கிலோ போதைப் பொருள்களை தெரியவந்தது. பின்னா், அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 15,700, போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

News September 20, 2024

மாணவிகளுக்கு வாழத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

image

தென்னிந்திய அளவிலான அஸ்விதா கேலோ இந்தியா மகளிர் டேக்வாண்டோ போட்டியில், பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற பெரம்பலூர் மாவட்ட, விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தனது வாழ்த்துகளை இன்று (20.09.2024) தெரிவித்தார். இந்நிகழ்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். இதனால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!