India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் காணும் பொங்கலான இன்று பெரும்பாலான இடங்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடுவர் என்பதால் மக்கள் கூடும் இடங்களில போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு, குற்றங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் கவனமாக இருக்க போலீசார் எச்சரித்தனர்.
வாலிகண்டபுரத்தில், 1125 ஆண்டுகள் பழமையான வாலீஸ்வரர் கோயில் உள்ளது, ஆதித்த சோழன் காலத்தில் கற்களாக புனரமைக்கப்பட்ட இந்த கோயில், பல சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு, விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. வானர அரசன் வாலி, இவ்வாலய சிவ பெருமானை வணங்கிதான் தனிடம் மோதும் எதிராளியின் பலத்தில் பாதி தனக்கு கிடைக்கும் வரம் பெற்றதாக இக்கோயிலில் ஐதீகம் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பர்மா மற்றும் இலங்கையில் இருந்து நாடு திரும்பிய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுக் கடன், அடமான பத்திரங்கள், கடவுச்சீட்டு வைத்து கடன் பெறப்பட்ட நபர்களுக்கு கடன்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து பத்திரங்கள், ஆவணங்களையும் திருப்பி ஒப்படைக்க அரசு நெறிமுறை, ஆட்சியர் தலைமையில் வழிகாட்டியுள்ளது. அதன்படி சார் ஆட்சியரை அணுகி தகவல்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன் (35). இவா், பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவரது கடையின் பூட்டை உடைத்து, ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள், ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது நேற்று (ஜன.13) தெரியவந்தது. தற்போது இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் நடந்த லெமன்&ஸ்பூன் போட்டியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்டியரும் பங்கேற்று அதில் முதலிடம் பிடித்தார். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய இந்த பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அரசு அலுவலர்களுடன் கலந்துகொண்டு மாவட்ட அரசு ஊழியர்களுக்கு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பெரம்பலூர் பாலக்கரையில் 36ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு பெரம்பலூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், எஸ்.பி ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து,பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வுதுண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி (ம) பயிற்சி நிறுவனம் பாடாலூரில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில், முதல்வர் பணியிடம் காலியாக இருந்த நிலையில்,மதுரைமாவட்டஆசிரியர் கல்வி (ம) பயிற்சி நிறுவனத்தில் துணை முதல்வராக பணியாற்றிய முனைவர் ராமராஜ் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி (ம) பயிற்சி நிறுவனத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பலர் வாழ்த்து தெரிவித்தனர் தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் காரியானூரைச் சேர்ந்த வெங்கடேசன்(35) என்பவர் பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையத்தில் எலக்ட்ரானிக் பொருள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையின் பூட்டை உடைத்து நேற்றிரவு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் டிவி,கிரைன்டர்,மிக்ஸி மற்றும் ரூ.10,000 பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் பாலக்கரையில் இன்று (13.01.2025) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார், மற்றும் சாலை விதிகளை மதித்து தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டிவந்தவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 76 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார். வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.