Perambalur

News September 27, 2024

பெரம்பலூர் கலெக்டர் நல திட்ட உதவிகளை வழங்கினார்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் 21 விவசாயிகளுக்கு அரசு மானிய உதவியுடன் கூடிய ரூபாய் 5.30 லட்சம் மதிப்பிலான பல்வேறு வகையான வேளாண் கருவிகளை இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.

News September 27, 2024

பெரம்பலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

image

திருச்சி மண்டலம் கலை பண்பாட்டுத்துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் குறித்த கலைப் போட்டிகள் பெரம்பலூர் மதன கோபாலபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News September 27, 2024

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்ட எஸ் பி ஆதர்ஷ் பச்சேரா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரு சமூகத்தினரிடையே பல்வேறு சூழல்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அமைதி குழு அமைத்து சமரசப் பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News September 27, 2024

சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா, முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.09.2024) நடைபெற்றது. இந்நிகழ்வில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News September 26, 2024

நாக்கை வெட்டுவதாக மிரட்டல் : பாஜக புகார்

image

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹச்.இராஜாவின் நாக்கை வெட்டினால் 50லட்சம் சன்மானம் வழங்கபடும் என்று பெரம்பலூர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ் கூறினார். இதற்கு பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்ய கூறி பெரம்பலூர் பாஜக சார்பில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் தலைமையில் ஏடிஎஸ்பியிடம் இன்று (செப்.25) புகார் கொடுத்தனர்.

News September 26, 2024

பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் (28/9/24) சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தக்க சான்றிதழ்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 26, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27/9/24 அன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற இருப்பதாக ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் வேளாண்மை கருவிகள், நீர் பாசனம் வேளாண் இயந்திரங்கள், வேளாண்மை கடன் மற்றும் வேளாண்மை மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடு சம்பந்தமாக விவாதிக்கப்படும். விவசாயிகள் கலந்து கொண்டு பலன் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 25, 2024

பெரம்பலூர் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை

image

N.புதூரை சேர்ந்த சின்னதுரை மனைவி கலா, அவர்களது மகன் சிவக்குமார் ஆகிய 3 பேரும் இவர்களது வீட்டின் அருகே உள்ள நீர்ஓடை ஒன்றில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வி.களத்தூர் போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை கொண்டதாக தெரிந்தது.

News September 25, 2024

கூத்தூர் பகுதியில் நாளை மின்தடை

image

கூத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதில் அரியலூர் மேற்கு பகுதி புஜங்காராயநல்லூர், ஜமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், அல்லிநகரம், உசேன் நகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மேத்தால் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தகவல்.

News September 25, 2024

மரக்கன்றுகள் நடும் விழாவினை கலெக்டர் எம் எல் ஏ துவக்கி வைத்தனர்

image

பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு நாளினை முன்னிட்டு நடத்தப்பட்ட 1000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தார்கள். இந் நிகழ்ச்சிகள் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!