Perambalur

News October 13, 2024

லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவர் கைது

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உத்தரவுபடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா லாட்டரி சீட் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பாலக்கரையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வந்த சிவகுமார், பெருமாள் ஆகியோர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.

News October 12, 2024

சுற்றுலாத்துறை அமைச்சர் பெரம்பலூர் வருகை

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு 13-10-2024 சுற்றுலாத்துறை அமைச்சர்பனைமரத்துபட்டி ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அதன் பிறகு எறையூர் சர்க்கரை ஆலையில் உள்ள சிப்காட் காலணி தொழிற் பூங்காவில்ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். திமுக நிர்வாகிகள் வரவேற்பதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News October 12, 2024

பெருமத்தூர் நல்லூர் கிராமத்தில் இடி தாங்கி இரண்டு பசு மாடுகள் பலி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பலத்த இடியுடன் கூடிய கனமழை விட்டுவிட்டு பெயரை தொடங்கியது. இந்நிலையில் குன்னம் அருகே பெருமத்தூர் நல்லூர் பகுதியில் பிரபாவதி என்பவர் இரண்டு பசு மாடுகளையும் அருகில் உள்ள மரத்தில் கட்டிவிட்டு காட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது இடி தாக்கி இரண்டு பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பலியானது. இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 12, 2024

பெரம்பலூர் அருகே இளைஞர் பலி

image

பெரம்பலூர் அருகே உள்ள எசனை நாவலூர் கிராமத்தில் இரண்டாவது பாலத்தில் சுந்தர்ராஜன், மணிகண்டன், கரிகாலன், உமா மகேஸ்வரன் ஆகிய நான்கு நபர்கள் அமர்ந்திருந்தவர்கள் மீது பால் வண்டி மோதியதில் சுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மூன்று பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 12, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.10.2024 அன்று நடைபெற உள்ளது. வேலை நாடுபவர்கள் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.

News October 11, 2024

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற இணையதளத்தில் அக்.15க்குள் விண்ணப்பிககுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும், (http://scholarships.gov.in) சந்தேகமேதும் இருப்பின் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 11, 2024

பெரம்பலூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

பாரத பிரதமரின் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் ஏறாதவர்களின் பட்டியல் செங்குணம் வி.எ.ஓ அலுவலக கட்டிடத்தில் தகவலுக்காக ஒட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள விவசாயிகள் தற்போது அருகில் உள்ள இ-சேவை மையத்தில் E-KYC எனப்படும் கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

News October 11, 2024

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பாராட்டு

image

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் மற்றும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று 10.10.2024 வழங்கினார்.

News October 11, 2024

பெரம்பலூர் அருகே 8 பேருக்கு சிறை

image

பெரம்பலூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட 8 பேருக்கு சிறை தண்டனை. பெரம்பலூா், அயனாபுரத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட பெரியசாமிக்கு 3 ஆண்டும், வரதராஜ், பொன்னுசாமி, மணிவேல், சுப்ரமணி, பச்சமுத்து, அந்தோணிசாமி, ராஜாராம் ஆகிய 7 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தொடா்புடைய 5 போ் உயிரிழந்துள்ளார்.

News October 10, 2024

வேப்பந்தட்டை : அரசு மது பாட்டில் விற்றவர் கைது

image

வேப்பந்தட்டை கிராம பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி அரும்பாவூர் காவல்துறையினர் இன்று சிறப்பு ரோந்து மேற்கொண்டு வந்த நிலையில் வேப்பதட்டையை சேர்ந்த ஆபிரகாம் (35) என்பவர் அவரது வீட்டிற்கு அருகே சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்துக்கொண்டிருந்தார். மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!