India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற இணையதளத்தில் அக்.15க்குள் விண்ணப்பிககுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும், (http://scholarships.gov.in) சந்தேகமேதும் இருப்பின் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரத பிரதமரின் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் ஏறாதவர்களின் பட்டியல் செங்குணம் வி.எ.ஓ அலுவலக கட்டிடத்தில் தகவலுக்காக ஒட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள விவசாயிகள் தற்போது அருகில் உள்ள இ-சேவை மையத்தில் E-KYC எனப்படும் கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் மற்றும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று 10.10.2024 வழங்கினார்.
பெரம்பலூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட 8 பேருக்கு சிறை தண்டனை. பெரம்பலூா், அயனாபுரத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட பெரியசாமிக்கு 3 ஆண்டும், வரதராஜ், பொன்னுசாமி, மணிவேல், சுப்ரமணி, பச்சமுத்து, அந்தோணிசாமி, ராஜாராம் ஆகிய 7 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தொடா்புடைய 5 போ் உயிரிழந்துள்ளார்.
வேப்பந்தட்டை கிராம பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி அரும்பாவூர் காவல்துறையினர் இன்று சிறப்பு ரோந்து மேற்கொண்டு வந்த நிலையில் வேப்பதட்டையை சேர்ந்த ஆபிரகாம் (35) என்பவர் அவரது வீட்டிற்கு அருகே சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்துக்கொண்டிருந்தார். மேற்படி நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பல்வேறு துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், பேறுகால இறப்புக்கான காரணங்கள் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் மற்றும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 31 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbpblr.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.
பெரம்பலூர் காய்கறி மார்க்கெட்டில் இன்று 1 கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், உருளைக்கிழங்கு -ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், கோழி அவரை ரூ.150 முதல் ரூ.170 வரையிலும், பீன்ஸ் ரூ.140 முதல் ரூ.150 வரையிலும், முருங்கைக்காய் ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், சின்னவெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், முள்ளங்கி ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
வயலப்பாடி பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று குன்னம் போலீசார் நடத்திய சோதனையில் பாண்டியன்(40), கரும்பாயிரம்(39) ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில் மொத்தம் 70 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் இவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் காரை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.