India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு, வரவு-செலவு கூட்டத் தொடரின்போது இன்று (25/10/2024) கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாக கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு, ரூ.366.00 கோடி மதிப்பீட்டில் 65,000 மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் நகரத்தின் பல முக்கிய பகுதிகளில் மோப்பநாய் படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு கண்டறிந்து அதனை அகற்றும் குழுவினர் ஆகிய இரண்டு குழுவினரும் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி, நான்குரோடு, பாலக்கரை மற்றும் ஆகிய இடங்களில் மோப்ப நாய்சக்தி (ExplosiveDog) கொண்டு வெடிகுண்டு சோதனை செய்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை முறையில் சிறப்பாக தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறையின் சார்பில் முதல் பரிசு 1 லட்சம், 2வது பரிசு 60,000 3வது பரிசு 40,000 வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது விவரத்தினை உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 21 வது கால்நடை கணக்கெடுப்பு பணி 25.10.2024 முதல் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிக்காக வருவாய் கிராமங்களுக்கு 62 கணக்கெடுப்பாளர்கள் (ம) 16 மேற்பார்வையாளர்கள் மூலமாகவும் நகர்புற வார்டுகளில் 8 கணக்கெடுப்பாளர்கள் (ம) 2 மேற்பார்வையாளர்கள் மூலமாகவும் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது என கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்தநிலை ஏற்பாடுகளை தோட்டப்பயிர் பயிரிடும் விவசாயிகள் பின்பற்றி பயனடைய வேண்டும். மேலும் அனைத்து வயல்களிலும் பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி விவசாயிகள் தங்கள் தோட்டக்கலை பயிர்களை மழையில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிபவர் தமிழக அரசு விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருத்தாளர்கள் awards.tn.gov.in என்ற வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்து 28.10.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டை சேர்ந்த யுவராஜ் என்ற நபர் சிவகாசிக்கு பட்டாசு கொள்முதல் செய்வதற்காக சென்ற போது, திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த 6 நபர்கள் வழிமறித்து, கத்தியால் தாக்கி 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற வட்டார வாரியாக முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி 24.10.2024 செட்டிகுளம் 25.10.2024, அடைக்கம்பட்டி 29.10.2024, மேலமாத்தூர் 5.11.2024, குன்னம் 7.11.2024, பெருமத்தூர் 9.11.2024, முருக்கன்குடி 12.11.2024, வேப்பூர் 14.11.2024, லப்பைக்குடிகாடு 16.11.2024, குரும்பலூர் 19.11.2024 நடைபெற உள்ளதாக என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு உதவிடும் வகையில், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளது. இதை கல்விக் கடனுதவி தேவைப்படும் மாணவ, மாணவிகள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம், மேலும் அனுமதி இலவசம் என பெரம்பலூர் ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.10.2024 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் நேற்று தகவல் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.