Perambalur

News October 31, 2024

பெரம்பலூரில் கனமழை எச்சரிக்கை

image

தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News October 31, 2024

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குவிந்த மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் நேற்று சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுவை பெற்றார். இம்முகாமில் 13 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

News October 31, 2024

மக்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்

image

➤எளிதில்‌ தீப்பற்றும்‌ ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக்‌ கூடாது
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம்‌, சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள்‌ வெடிக்கக்‌ கூடாது
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப்‌ பயன்படுத்த வேண்டும்‌
➤ வாளியில்‌ தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்‌
➤ தீக்காயம்‌ ஏற்பட்டால்‌ சுயமாக மருந்துகளை எடுத்துக்‌ கொள்ளாமல்‌ மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும்‌. SHAREIT

News October 30, 2024

தாய் மகள் இருவரையும் கட்டிப்போட்டு பணம் திருட்டு

image

பெரம்பலூர் மாவட்டம் கல்யாண் நகரில் வசித்து வரும் ஹேமலதா, அவரது மகள் அபிநயா என்பவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து தாய் மகள் இருவரையும் கை கால் களைகட்டி வைத்து வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து ஹேமலதா பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 30, 2024

பெரம்பலூரில் நாளை மழை வெளுக்கும்

image

தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியான நாளை திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News October 30, 2024

பெரம்பலூரின் அடையாளமாக திகழும் நஞ்சன்குடி கோட்டை

image

ரஞ்சன்குடிகோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய கோட்டையாகும். இது பெரம்பலூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோட்டையை ரஞ்சன்குடி கோட்டை என்றும் நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். 1751ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பு காட்சியாக இந்த கோட்டை அமைந்துள்ளது. இது நம்ம பெரம்பலூருக்கு ஒரு அடையாளமாக திகழ்கிறது. ஷேர் செய்யவும்

News October 30, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மகளிர் விடுதிகள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதிகள் அனைத்தும் அரசின் சட்ட விதிமுறைகளின்படி, பதிவு செய்து செயல்பட வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். SHAREIT

News October 29, 2024

பெரம்பலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு

image

தமிழ்நாடு முதலமைச்சர் நவம்பர் மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்துகொள்ள வருகை தர உள்ளதால், நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம் மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் இன்று (29.10.2024) ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News October 29, 2024

வாக்காளர் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர்

image

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருவதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை- 2025 வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (அக்.29) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டார்.

News October 29, 2024

ரூ.10 லட்சம் வழிப்பறி: 2 பேர் கைது

image

செங்கல்பட்டில் இருந்து சிவகாசிக்கு பட்டாசு வாங்க சென்ற நபரை வழிமறித்து ரூ.10 லட்சம் வழிப்பறி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் திருநங்கையுடன் உல்லாசமாக இருந்த போது மர்ம நபர்கள் மிரட்டி பணம் பறித்துள்ளனர். இதையடுத்து போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட சந்துரு (எ) பாபு, அப்துல் ஹமீது ஆகியோரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

error: Content is protected !!