Perambalur

News February 12, 2025

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று 12.02.2025-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றார்.இந்த முகாம் மூலம் 29 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News February 12, 2025

முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க அழைப்பு

image

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவரது குடும்பத்தினர் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கி கடனுதவி பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்தியில் முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக காக்கும் கரங்கள் என்னும் புதிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரை வங்கிக் கடனுதவியும், கடன் தொகையில் 30 சதவீதமாக பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

News February 12, 2025

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்த ரெங்கராஜ் (32) என்பவர் நேற்று இரவில் அவரது நண்பருடன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றபோது முன்னால் சாலையில் பழுதாகி நின்ற லாரியின் மீது மோதியதில் ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அவரது நண்பரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

News February 11, 2025

பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு விற்பனை

image

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் இணைந்து, பெரம்பலூர் திடலில் 9-வது புத்தகத் திருவிழா ஜன.31-ஆம் தேதி முதல் பிப்.9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், ரூ.1,09,48,496 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனர்.

News February 10, 2025

பெரம்பலூர்:1,09,48,496 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை.

image

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், BAPASI மற்றும் மக்கள் பண்பாட்டு மன்றம் இணைந்து நடத்திய 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா கடந்த 10 நாட்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 78,267 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். ரூ.1,09,48,496 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News February 10, 2025

மளிகை கடையில் திருட முயற்சி

image

பாடாலூர் காவல் நிலையம் எதிரே உள்ள கடைவீதியில் உள்ள ஆனந்தன் என்பவரது மளிகை கடையில் கடந்த 7-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் மளிகை கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மளிகை கடையின் பூட்டை உடைத்துள்ளனர். இதனை கண்ட அந்த வழியாக சென்ற ஒருவர் சத்தமிட, அவர்கள் திருடும் முயற்சியை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். தற்போது பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 9, 2025

பெரம்பலூரில் கிடைத்த வரலாற்றுச் சிறப்பு 

image

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமம் நிறைய குளங்களை கொண்டுள்ள ஊராகும். இந்த ஊரில் உள்ள ஒரு ஏரிக்கு வாணவி சாத்திர நாடாள்வான் என்பவர் IIIஆம் ராஜராஜன் காலத்தில் தூம்பு அமைத்த தகவல் வரலாற்று ஆய்வாளர்கள் வழியாக அறிய முடிகிறது. மேலும் நாயக்கர் கால கல்வெட்டு ஒன்றின் மூலம் முன்பு இந்த ஊரில் குளக்கானத்தூர், மால்வாய் நிர்வாகப் பிரிவுக்கு தலைநகராக இருந்துள்ளது என முடிகிறது.

News February 9, 2025

பெரம்பலூரில் பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் பேச்சு

image

பெரம்பலூரில் நடைபெற்று வரும் ஒன்பதாம் ஆண்டு புத்தகப் திருவிழாவில் (பிப்.8) நேற்று  பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் பேச்சாளராக மக்கள் மேடையில் பேசினார். 31.1.2025 தொடங்கிய புத்தகத் திருவிழாவில் இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்று தீர்ந்தன. பெரம்பலூர் மக்கள் புத்தக வாசிப்பை அதிகப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு முயற்சியில் இன்று இறுதி நாளை எட்டியுள்ளது, இன்றுடன் முடிவடைகிறது.

News February 9, 2025

பெரம்பலூர்: இளம் சிறார்களுக்கு கஞ்சா விற்ற இளைஞர் கைது

image

பெரம்பலூர் – துறையூர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சங்குபேட்டையை சேர்ந்த 19 வயது இளைஞன் விசாரித்ததில் இளம் சிறார்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைகாவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News February 9, 2025

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதற்கட்டமாகவும், பிப்ரவரி 17ஆம் தேதி இரண்டாம் கட்டமாக விடுபட்ட குழந்தைகளுக்கு நடைபெற உள்ளது. 1 முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!