Perambalur

News November 5, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, தகவல் தெரிவித்தல் மற்றும் வழக்கு பதிவு செய்தல் தொடர்பான முறையீடுகளை 18002021989 (அ)14566 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி வாயிலாக புகார்களை அனைத்து வேலை நாட்களிலும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 4, 2024

பெரம்பலூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் 

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே கலெக்டர் வந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 231 மனுக்கள் பெறப்பட்டன. 

News November 4, 2024

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைவர்கள் அறிமுகம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்குரிய மாவட்டத் தலைவர்களை அறிமுகம் செய்தார். அதே போல் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாவட்ட தலைவராக சிவா என்பவரை அறிமுகம் செய்தார். மாவட்ட தலைவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

News November 4, 2024

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சடலமாக மீட்பு

image

சத்தரமனை கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் கடந்த 10 வருடங்களாக செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் (ம) அருகே உள்ள மண்டபத்தில் தங்கி வசித்து வந்தார். இவர் நேற்று வழக்கம் போல அதே பகுதியில் உள்ள சேகர் என்பவரின் விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தார். தகவறிந்த போலீசார் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 4, 2024

குன்னம் பகுதியில் இடி தாக்கி மாடு பலி

image

குன்னம் பகுதி சின்னவெண்மணி கிராமத்தில் நேற்று கனமழை பெய்தது. அச்சமயம் சரோஜா என்பவருடைய பசுமாடு இடி மின்னல் தாக்கி உயிரிழந்தது. எட்டு ஆண்டு நிறைவடைந்த பசுமாடு எனவும் 30 ஆயிரம் மதிப்புமிக்க மாடு எனவும் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த பசுமாட்டை கிராமத்தின் மக்கள் மிகுந்த சோகத்துடன் பார்த்துச் சென்றனர்.

News November 4, 2024

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

image

தீபாவளி பண்டிகை முடிந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு எந்த ஒரு பேருந்து இடையூர் இல்லாமல் இருப்பதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பேருந்தில் பயணிக்கும் பயனாளிகளில் குறைகளை கேட்டறிந்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News November 3, 2024

பெரம்பலூரில் நாளை மின்தடை

image

மங்களமேடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரஞ்சன்குடி, பெருமத்தூர், தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, வாலிகண்டபுரம், மேட்டுபாளையம், க.புதூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், பிம்பலூர், மறவநத்தம், தைகால், ஆடுதுறை, ஒகளூர், வேப்பூர், நன்னை, பரவாய் ஆகிய பகுதிகளில் நாளை (நவ.4) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 3, 2024

ரூ.5 கோடிக்கு மது விற்பனை

image

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அரசாங்கத்தால் மது விற்பனை டாஸ்மாக் நடைபெற்று வருகிறது. இதில் பண்டிகை காலங்களில் அதிகப்படியான மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் (31-10-2024) தீபாவளியன்று ரூ.5 கோடியே 44 லட்சத்து 35 ஆயிரத்து 850 ரூபாய்க்கு மது விற்பனை விற்பனை நடந்துள்ளது.

News November 2, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 5.11.2024 பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News November 2, 2024

குடும்ப தகராறில் பெண் தற்கொலை

image

இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் இவரது மனைவி ஐஸ்வர்யா (21) இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில், ஐஸ்வர்யா வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வி.களத்தூர் போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வரதட்சனை கொடுமை ஏதும் உள்ளதா என சப் கலெக்டரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

error: Content is protected !!