Perambalur

News November 15, 2024

பெரம்பலுருக்கான திட்டங்கள் – முதலமைச்சர் அறிவிப்பு

image

முதல்வராக பொறுப்பேற்ற பின் மகளிருக்கான கட்டணமில்லா திட்டத்திற்கு தான் முதல் கையெழுத்திட்டேன். பெரம்பலூரில் 456 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளேன். 27 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். பெரம்பலூர் மாவட்டம் மருதையாற்றின் குறுக்கே ரூ.24 கோடியில் பாலம் அமைக்கப்படும். அரசு மாதிரி பள்ளிகளுக்கு ரூ.56 கோடியில் புதிய வகுப்பறை விடுதி கட்டடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

News November 15, 2024

குன்னம் அருகே 10க்கும் மேற்பட்டோர் காயம்

image

குன்னம் வட்டம், கல்லமபுதூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது புளிய மரத்தில் இருந்த கதண்டு வண்டுகள் கடித்து 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News November 15, 2024

மதுபான கடையில் தகராறு செய்தவர் கைது

image

ஆலத்தூர் வட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் காரை கிராமத்தில் உள்ள மதுபான கடையில் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக மதுபான கடையில் பணியாளர்கள் பாடலூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து, வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News November 15, 2024

பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.1000

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 14 ஆம் தேதி ஊரக திறனறித் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு நவம்பர் 20 ஆம் தேதிக்குள் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் இருக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும், மாணவர்களே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News November 14, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.11.2024 அன்று மாலை 4:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக வழங்கி பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

11,721 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் விழாப் பேரூரை ஆற்றவுள்ளார்கள். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொள்ள உள்ளதாக பெரம்பலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

11,721 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ள முதல்வர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் விழாப் பேரூரை ஆற்றவுள்ளார்கள். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

எந்திரத்தில் சிக்கி சூப்பர்வைசர் பலி

image

திருச்சி, பொன்மலை பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (27) இவர் பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான கிரசரில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். அப்போது கிரஷர் உற்பத்தி செய்த ஜல்லி கற்கள் லாரிகளில் ஏற்றுவதற்காக லோடர் எந்திரத்தில் இருந்து ஜல்லிக்கற்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன. இதில் தடுமாறிய ஹரிஹரன் லோடர் எந்திரத்தின் மீது விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News November 14, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பெரம்பலூர் நகரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு வார விழா கொடியினை நவம்பர் 14 ஆம் தேதி நாளை காலை 9:30 மணிக்கு ஏற்றி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நவம்பர் 13ஆம் தேதியான இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

பெரம்பலூர்: ட்ரோன்கள் பறக்க தடை

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தர உள்ளதால், பாதுகாப்பு காரணம் கருதி 14.11.2024 மற்றும் 15.11.2024 ஆகிய இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

error: Content is protected !!