India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பெரிய ஏரிக்கரை உடைந்து நீர் வெளியேறியதால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், சார் ஆட்சியர் கோகுல் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று ஏரிக்கரை உடைப்பை பார்வையிட்டு, உடனடியாக அதை சீரமைக்க உத்தரவிட்டனர். உடைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு நன்னை கழனிவாசல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நாளை (04-12-2024) மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்கிறார்கள். இதனால் நாளை காலை 9:30 மணி முதல் 4.30 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியத்துறை அறிவித்துள்ளது.
பெரம்பலூர் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவுச் சான்றிதழ் அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்ய.udayamregistration.gov.in என்ற இணையதளம் மூலம் தானாகவே பதிவு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். நிறுவனங்களை ஒழுங்கு படுத்தப்பட அரசு அங்கீகாரம் மானியம் பெற சான்றிதழ் கட்டாயம் வேண்டும். தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நாளை காலை 11 மணி அளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவிப்பு.
வேப்பந்தட்டை வட்டார பகுதிகளான தளுதாழை, அரும்பாவூர், அ. மேட்டூர், கொட்டாரகுன்று, மலையாளப்பட்டி, சின்னட்டுலு, கோரையாறு, பூஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான மக்காச்சோள வயல்களில் சோளம் சாய்ந்து நாசமானது. வயல்களில் தேங்கிய மழைநீரால் சோளம் அழுகிய நிலையில் காணப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூரில் 45 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் எறையூர் 38 சென்டி மீட்டர் வாக்களத்தூர் 37 சென்டி மீட்டர் தழுதுவளை நாற்பத்தி ஏழு சென்டி மீட்டர் லப்பைகுடிக்காடு 41 செண்டிமீட்டர் வேப்பந்தட்டை 48 சென்டிமீட்டர் மழை பரவலாக பெய்துள்ளது. அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு கரையை கடந்து, தற்போது புதுச்சேரி அருகே நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு இன்று ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இரவு முதலே மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழையா? கமெண்ட் பண்ணுங்க.
பெரம்பலூர் மாவட்டம் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா போட்டிகள் 05.12.2024 அன்று தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க dyc.perambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் 04.12.2024 மாலை 5.00 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும். மேலும் தகவல்களுக்கு 7810982528, 04328-296213 என்ற எண்ணை தொடர்பு கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த புயலானது தற்போது மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வரும் நிலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற தகுதி உள்ளவர்கள், தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு டிச.20க்குள் அனுப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தகுதி உள்ளவர்கள், தங்களது விண்ணப்பம், சுயவிவரம், தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் வடக்கு கிராமத்தில் டிச.11ஆம் தேதி கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. துங்கபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை துங்கபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.