Perambalur

News November 21, 2024

பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அரிய வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு நாளை(22-11-2024) 12:00 மணிக்கு தந்தை ஹேண்ட்ஸ் ரோவர் கல்லூரியில் நடைபெறுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் வயது வரம்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் வரவும். மேலும் தகவலுக்கு 9865953023/6369549621 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News November 21, 2024

தேசத் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி

image

பெரம்பலூரில் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT

News November 21, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2024

சிறப்பு பட்டா மாறுதல் முகாம் அறிவிப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட “உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற்றும் வருகின்றார்கள். பெரம்பலூரில் இத்திட்டம் இன்று தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் குரு தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் எளம்பலூர் ரோடு முருகன் கோவில் அருகில் தாய்கோ வங்கி கிளை மேலாளரை நேரிலோ அல்லது 9344159168, 04328 275633 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

பெரம்பலூர்: “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்

image

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பெரம்பலூர் வட்டம், வேலூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்தல் குறித்து நியாவிலைக்கடை, குழந்தைகள் மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கள ஆய்வினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மேற்கொண்டார்.

News November 20, 2024

விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் ஆதிதிராவிடர் நலத்துறையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கு, டாக்டர் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன முன்னேற்றத்திற்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் விருது ஜனவரி 2025 இல் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. பட்டியல் இனத்தவருக்கு அரிய தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் போன்ற நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHAREIT

News November 20, 2024

விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

ஆதிதிராவிடர் நலத்துறையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன முன்னேற்றத்திற்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் விருது ஜனவரி 2025 இல் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே பட்டியல் இனத்தவருக்கு அரிய தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் போன்ற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 20, 2024

ரேஷன் கடை வேலைவாய்ப்பு: நேர்முகத் தேர்வு அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 31 விற்பனையாளர் பணிகளுக்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத்தேர்வு நவம்பர் 25ஆம் தேதி துவங்கி, நவம்பர் 29 வரை பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மேலும் நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்யவும்

News November 19, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO) மூலமாக வழங்கப்பட்டு வரும் பல்வேறு கடன் மற்றும் கல்வி கடன் திட்டங்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நவம்பர் 19-ஆம் தேதியான இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!