India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின் வாரிய கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் டிசம்பர் 10ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள் குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என செயற்பொறியாளர் அசோக்குமார் இன்று தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை., கூட்ட அரங்கில், ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் 1,771 பயனாளிகளுக்கு ரூ.9.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கினாா்.
கடந்த 2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அடிதடி வழக்கின் குற்றவாளிகளான பூலாம்பாடியை சேர்ந்த ஆறுமுகம், ராஜேஷ், குமார், கோவிந்தராஜ், நாட்டார் என்கிற ராஜு, ஆதிமூலம் ஆகிய 6 பேருக்கு தலா 14 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி நேற்று உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 18.12.2024 முதல் 27.12.2024 வரை ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. டிச 18, 19, 20 ஆகிய 3 நாட்களுக்கு அரசு பணியாளர்களுக்கு ஆட்சி மொழி ஆய்வும், டிச 23 வணிக நிறுவன அமைப்புகளை கொண்டு கூட்டமும், டிச 24 தேதி ஆட்சி மொழி தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. டிச 27ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு பட்டிமன்றம் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மின் மோட்டார் பம்பு செட்டுகளை, தொலைதூரத்தில் இருந்து கைப்பேசி வழியாக இயக்கக்கூடிய கருவிகளை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு தண்ணீர்பந்தல் ரோவர் கல்லூரி பின்புறம் உள்ள வேளாண்மை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை நேரிலோ (அ) 9842470358, 9944850423 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூா் மாவட்டத்தில் 51 ஆயிரம் போ் உறுப்பினா்களாகப் செய்துள்ளதாக ஆட்சியா் கிரேஸ பச்சாவ் தெரிவித்துள்ளார். மாவட்ட தொழிலாளா் ஆணையா் அலுவலகத்தின் கட்டுமானத் தொழிலாளா்கள் 42,454 பேரும், அமைப்புசாரா 6,995 ஆட்டோ ஓட்டும் 1,796 பேரும் மொத்தம் 51,245 பதிவு செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கின் போது மர்ம நபர்கள் நீதிபதியின் மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் ரூ.20,000 ஆயிரத்தை திருடி சென்றனர். அதேபோன்று செஞ்சேரியில் உமேஷ் என்பவரது வீட்டில் 4 பவுன் தங்க சங்கிலி, 11/4 பவுன் நகை, ரூ.6,800 திருடி சென்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பவர் டில்லர் மற்றும் விசைக்கலை எடுக்கும் கருவி (பவர் வீடர்) விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வட்டார அளவில் உதவி செயற் பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல்.
பெரம்பலூர் நகர், துறைமங்கலம் நான்கு ரோடு அருகில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பெறப்பட்ட ரூ.23.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
குன்னம் வட்டம் கரம்பியம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். கரம்பியம் கிராமத்தில் நேற்று இரவு 7:30 மணி அளவில் மருதமுத்து என்பவர் குளிக்க சென்றுள்ளார். அப்போது கதவுக்கு இடையே செல்லும் மின் இணைப்பு உரசி தேய்ந்ததால் அவர் உள்ளே சென்றபோது மின் இணைப்பை தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.