India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மூலம் 11 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது
பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற சர்க்கரை ஆலைபேரவைக் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முக்காடு அணிந்து, காதுகளை மூடிக்கொண்டு கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எரயூர் சக்கரை ஆலையின் 47 வது பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. சக்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தியை தொடங்க வேண்டும். விவசாயிகளின் பங்கு 46.41 சதவீதமாக மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மார்ச் 8ஆம் தேதி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு பெரம்பலூர் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேற்று அறிவித்துள்ளார். வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.11.2024 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர் பாசனம் வேளாண்மை கடனுதவிகள் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றியும் முறையீடுகள் பற்றியும் விவாதிக்கப்படும் விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் ஆத்தூர் சாலையில் உள்ள மாடர்ன் ரைஸ் மில் அருகில் நேற்று இரவு ஆத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தின் மீது நெல் அறுக்கும் இயந்திர வாகனம் (ஹார்வெஸ்டிங்) மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வாகனமும் சேதமடைந்தது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூட்டுறவுத்துறை சார்பில் இன்று (25.11.2024) நடைபெற்ற நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
முதலமைச்சர் கோப்பை 2024- க்கான போட்டிகளில் மாநில அளவில் பதக்கம் வென்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை இன்று (25.11.2024) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த புரோ பிகோனசோல் 25 EC (அ) ஹெக்ச கோனசோல் 5EC இவற்றுள் ஏதேனும் ஒரு பூஞ்சான கொள்ளையை ஏக்கருக்கு 200 மி. லி.வீதம் இழை வழியாக தெளிக்கலாம் என தோட்டக்கலைத்துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி பயன் பெற வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
வேப்பந்தட்டை அடுத்த வி.களத்தூர் தனியார் பள்ளியின் மாணவர்கள் திருச்சியில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியின் 17 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம் எதிர்பாராத இயற்கை சூழலில் ஏற்படும் இழப்பு ஏற்படும் பட்சத்தில் வருமானம் கிடைக்க பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. வரும் 30ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். ஏக்கருக்கு ரூ.2060 செலுத்த வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.