Perambalur

News March 27, 2025

பெரம்பலூர்: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் ஆகிய பிரிவுகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

News March 27, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

பொது சுகாதார துறை அறிவுறுத்தலின்படி கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் வழக்கத்திற்கு மாறாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் கோடை காலத்தில் பொதுமக்கள்,தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அணிந்து வேலை செய்ய வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News March 26, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

உலக தண்ணீர் தினமான 22.3.2025 அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் தமிழ்நாடு அரசின் நிர்வாக காரணங்களால் 29. 3.2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் 29.3.2025 அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது இக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News March 26, 2025

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆலோசனை முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை சீனிவாசன் பல்கலைக்கழகத்தின், பொறியியல் கல்லூரியில் “என் கல்லூரிக் கனவு” ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார். இதனை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் SHARE பண்ணுங்க..

News March 26, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கோடைகாலத்தில் பொதுமக்கள் வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொது சுகாதாரம் (ம) நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும் கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுமக்கள் அதிக அளவில் மோர், இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை சாறு, ORS கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும் என கலெக்டர் தகவல்.

News March 26, 2025

கோக்சோ வழக்கில் இளைஞருக்கு 30 வருடம் சிறை தண்டனை

image

பெரம்பலூர் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக மருவத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் மணிகண்டன் (29) என்பவருக்கு 30வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News March 26, 2025

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஒருநாள் சுற்றுலா

image

மாற்றுத்திறனாளி குழந்தைகளை திருச்சி மாவட்டம் பறவைகள் பூங்கா, அண்ணா அறிவியல் கோளரங்கம், வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் சுற்றுலாவிற்காக நேற்று (24.3.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் வழி அனுப்பி வைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2025

முன்களப்பணியாளர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

image

பெரம்பலூரில் (மார்ச்.25) உரிய தேதிகளில் ஊதியம் வழங்க ஆணை பிறப்பிக்கக் கோரி தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று திங்கட்கிழமை காலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.

News March 25, 2025

26ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பயிற்சி வகுப்புகள் 26.3.2025 முதல் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த போட்டித் தேர்வு ஆர்வலர்கள் நேரில் அல்லது 9499055913 என்ற மாவட்ட வேலை வாய்ப்பு மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

பெரம்பலூர் குற்றவாளிகள் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றம் நடைபெறாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பஸேரா உத்தரவின்படி ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வழக்கமான குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதிரடி சோதனையில் செய்யப்பட்டது.

error: Content is protected !!