India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் – மானாமதுரை சாலையில் மேலமாத்தூர் பகுதியில் ஆட்டோவும் மற்றொரு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி, நான்கு பேர் படுகாயம். தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குன்னம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1077 மற்றும் 1800 425 4556 ஆகிய எண்களிலும், வாட்சப் மூலமாக தகவல்களுக்கு 8220165405 என்ற எண்ணிலும் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், மின்சார தொடர்பான சேவைகள் உதவிகள் மற்றும் புகார்களுக்கு மின் நுகர்வோர் சேவை மையம் எண்ணான 94987 94987 என்ற எண்ணை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் மின் கம்பங்கள் அருகில் நிற்பது, மற்றும் மின்சார வேலைகளை செய்வது ஆகியவற்றை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு வரும் 14/12/24 காலை 9 மணியளவில் தந்தை ரோவர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். விருப்பமுள்ள வீராங்கனைகள் 31.08.2012க்கு முன் பிறந்திருக்க வேண்டும் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் வரலாம். மேலும் தகவல்களுக்கு 9840673348, 9944139234, 9865953023 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வை.வேலுசாமி, அ. முத்துக்குமார், ம.கலியமூர்த்தி, க.கனகராஜ், இரா.ராஜேந்திரன் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதன் காரணமாக, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அவர்கள் வகித்துவந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 14.12.2024 அன்று நடைபெற உள்ளது. அதன்படி பெரம்பலூர் வட்டம் புது நடுவலூர் கிராமத்திலும், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்திலும், குன்னம் வட்டம் சித்தலி (மேற்கு) கிராமத்திலும், ஆலத்தூர் வட்டம் சிறுகன்பூர் (மேற்கு) கிராமத்திலும் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கபிர் புரஸ்கார் விருது காவல் தீயணைப்பு துறை உள்ளிட்ட துறையில் இருப்பவர்கள் இவ்விருதினை பெற விண்ணப்பிக்காலம். கடைசி நாள் 15-12-2024. 3 பிரிவில் ரூ20000,10000,5000, பரிசு வழங்கப்படும். பரிசு வழங்கும் நாள் 26-01-2025.http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். என இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவிப்பு.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷிமலையில் வருடந்தோறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா அன்று மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். வெகுவிமரிசையாக நடைபெறும் இந்ததீபத் திருதிருவிழாவில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வர். அதன்படி வரும் 13ஆம் தேதி 42 வது ஆண்டாக நடைபெறும் தீபத்திருவிழாவிற்கான அழைப்பிதழை அமைச்சர் நேருவிடம் தவசி சுவாமிகள் கொடுத்து வரவேற்றார்.
பாடலூர் கிராமத்திற்கு அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் நேற்று மாலை ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக பாடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிணற்றில் மிதந்த உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.