Perambalur

News January 10, 2025

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

image

பெரம்பலூர் மாவட்டம், எழுமூர் கிராமத்தில் சங்கர் என்பவரின் மகன் மோகித் (8) சிறுவன் கிராமத்தில் உள்ள சங்கரன் என்பவரின் வயலில் விளையாடி கொண்டிருந்தபோது, அருகில் கொய்யாக்காய் மரத்தில் பறிப்பதற்காக ஏரி தவறி விழுந்து பலி. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சிறுவன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெருந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 9, 2025

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

பெரம்பலூர் அருகே தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு  அமலாக்கப்பிரிவு) பாலமுருகன் சிறப்புரையாற்றி போதை ஒழிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்ச்சி பாடல்களும் பாடப்பட்டன.

News January 9, 2025

பசுமைத்திட்ட பள்ளியாக து.களத்தூர் பள்ளி தேர்வு

image

பசுமைப் பள்ளிக்கூடத் திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள 2024-2025 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் து.களத்தூர் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.20,000 பரிசு வழங்கப்பட உள்ளது.

News January 8, 2025

பெரம்பலூர் : எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று (ஜன.08) பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் பொதுமக்களிடம் இருந்து 22 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

News January 8, 2025

 சிறந்த ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கான தேர்வு

image

ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் இன்று (ஜன.08) காலை 10 மணி அளவில் சிறந்த ஜூனியர்களை தேர்வுசெய்வதற்கான எழுத்து தேர்வு பெரம்பலூர் அ.மே.நி.பள்ளியில் நடைபெற்றது. இதில், ரெட்கிராஸ் செயலர் ராதாகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் மாயக்கிருஷ்ணன், கன்வீனர் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வை நடத்தினர். தேர்வு எழுதிய 181 மாணவர்களில், 50 பேர் தேர்வு செய்யப்பட்டு ஜன.29 அன்று விருது வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News January 8, 2025

பெரம்பலூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

image

பெரம்பலூரில் திருட்டை தடுத்து நிறுத்தி பொதுமக்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி நாளை மறுநாள் (ஜன.10)  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவதாக செயற்குழு கூட்டத்தில் கூடுதல் காவலர்களை நியமனம் செய்வது, கூடுதல் காவல் நிலையம் அமைப்பது குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

News January 8, 2025

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு பத்தாயிரம் விதம் வழங்கப்பட உள்ளது. பள்ளி கல்லூரிகளின் சார்பில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் கலந்து கொள்ளலாம்.

News January 8, 2025

இளைஞர்களுக்கு உதவித்தொகை – கலெக்டர் 

image

மாற்றுத்திறனாளி பள்ளியிருதி வகுப்பு வரையிலான தகுதிக்கு மாதம் ரூ. 600, பிளஸ் 2 தகுதிக்கு ரூ.750, பட்டப்படிப்புக்கு ரூ.1000 வீதம் வழங்கப்படும். இதர மனுதாரர்களை பொறுத்தவரையில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 வீதம் வழங்கப்படும். ஆண்டு தோறும் அளிக்க வேண்டிய சுய உறுதிமொழி ஆவணம் பிப் 28ஆம் தேதிக்குள் தகுதி சான்றினை சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

பெரம்பலூர்: நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம்

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜன.08) நடைபெறவுள்ளதால், பெரம்பலூர் புதிய, பழைய பஸ் நிலையங்கள், மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்கு ரோடு, பாலக்கரை, சிட்கோ, துறையூர் சாலை, அரணாரை, கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

News January 7, 2025

பெரம்பலூர்: பெண் வாக்காளர்களே அதிகம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் உள்ள 5,86,073 வாக்காளர்களில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். அதன்படி, பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 9,056 பெண் வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 3,805 பெண் வாக்காளர்களும் என 2 தொகுதியிலும் உள்ள ஆண் வாக்காளர்களை விட அதிகமாக உள்ளனர். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!