India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் விழாக்குழுவினர் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான அனுமதி கோரும் விண்ணப்பங்கள் விழா நடத்த உத்தேசிக்கப்பட்ட நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக www.jallikattu.tn.gov.in என்ற முகவரியில் இணைய வழியாக விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அலுவலர்கள் மற்றும் விழா அமைப்பாளர்களுக்கு விளக்கும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (22.1.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் குன்னம் வட்டத்திற்குட்பட்ட, துங்கபுரம் ஊராட்சியில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குழந்தைகள் நல மையம், சமையற் கூடம், துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இன்று (22.01.2025), மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு செய்தார்.
குன்னம் தொகுதி,ஆலத்தூர் ஒன்றியம்,கூடலூர் ஊராட்சியில் அமைந்துள்ள “தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு”, தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சிவசங்கர் இன்று (22.01.2024) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா & கலைஞர்நூற்றாண்டு பெருந்திரளணி (28.01.25 – 03.02.25) திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறுவதால் இன்று (ஜன.22) பெரம்பலூர் மாவட்ட சாரணர் இயக்க லோகோ வெளியிடப்பட்டது. இதனை முதன்மைக் கல்வி அலுவலர் முருகம்மாள் வெளியிட, மாவட்ட ஆணையர் செல்வராஜ் பெற்றுக்கொண்டார். மேலும், மாவட்ட பொறுப்பாளர்கள் மாயக்கிருஷ்ணன், பிரகாஷ், குணாளன் உடனிருந்தனர்.
துறைமங்களத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் டேட்டிங் ஆப் மூலம் பழகி ரூ.15,90,000-யை வங்கி கணக்குகள் மூலம் பெற்று ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். இதற்கு முன்னதாக வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தனிடம் இருந்து அந்த நபர் பண மோசடி செய்ததாக ஏமாற்பட்ட அந்த இளம்பெண் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கலூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்ற வாலிபர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை மதுபோதையில் பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற போது சிறுமி சத்தம் போட்டு கூச்சலிட்டார். சிறுமியின் தாயார் தட்டி கேட்ட பொது கட்டையால் அடித்து தாக்கினான். இதை பார்த்த பொதுமக்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் போக்ஸோ வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கு, சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், நொச்சியம், வி.களத்தூர், எழுமூர் (கிழக்கு), சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் 25-ந்தேதி காலை 10 மணியளவில் முகாம் தொடங்கி நடைபெற உள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க..
பாடாலூரில் உள்ள ஸ்பென் பிட் கார்மெண்ட்ஸ் அலகில் Tailor, Checker, Helper, Ironer ஆகிய பணிகளுக்கு வேலையாட்கள் தேவைப்படுவதால், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக வேலைவாய்ப்பு முகாம் 30.01.2025 அன்று Finefit கார்மெண்ட்ஸ் நிறுவனத்திலேயே காலை 9.00 முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.மேலும் விவரங்களுக்கு 9025027058,9843190666,9444094136 ஆகிய எண்களில் தொடர்புகொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
Sorry, no posts matched your criteria.