Perambalur

News October 1, 2025

பெரம்பலூர் ஆட்சியர் யார் தெரியுமா?

image

பெரம்பலூர் ஆட்சியர் ந.மிருணாளினி, 2001-ல் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராக பணி நியமனம் பெற்றார். பின்னர் இணைப் பதிவாளராக புதுகை, திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், சென்னையில் கூடுதல் பதிவாளராகவும் பணிபுரிந்தார். கடந்த 2023-ல் IAS-ஆக பதவி உயர்வு பெற்று, ஸ்ரீபெரும்புதூா் சாா்-ஆட்சியராக பதவி வகித்து, தற்போது பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

News September 30, 2025

பெரம்பலூர் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.30) ஆதிதிராவிட பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருனாளினி மற்றும் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News September 30, 2025

பெரம்பலூர்: ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

பெரம்பலூர் மக்களே! மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பெண் செவிலியர், விடுதி காப்பாளர், கணக்காளர், இளநிலை செயலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் போன்ற பல்வேறு பணிகள் நிரப்பப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 23.10.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 30, 2025

பெரம்பலூர்: உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்

image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட சு.ஆடுதுறை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சு.ஆடுதுறை-கடலூர் மாவட்டம், பாளையம் கிராமத்தையும் இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே 19.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News September 30, 2025

பெரம்பலூர்: வெளியூர் செல்லும் மக்கள் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மக்களே, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து வெளி ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? அப்போ, இந்த தகவல் உங்களுக்கு தான்! விடுமுறை நாட்கள் முடிந்து வெளியூர் திரும்பும் போது, பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் ‘1800 599 1500’ என்ற எண்ணில் எளிதாக புகாரளிக்கலாம். கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே <>க்ளிக் செய்யவும்<<>>. SHARE பண்ணுங்க!

News September 30, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் செய்யவும்<<>>. SHARE IT NOW..

News September 30, 2025

பெரம்பலூர்: உழவர் நல சேவை மையம் தொடங்க வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறையின் கீழ் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் மானிய உதவி பெற www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதளத்தில் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 30, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சு.ஆடுதுறை, அகரம்சீகூர், லப்பைகுடிகாடு, கிழுமத்தூர், புதுவேட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செப்.30) பல்வேறு அரசு திட்டங்கள் துவக்கப்படவுள்ளது. எனவே இந்த திட்டங்களை துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டி வைப்பதற்காக பெரம்பலூர் மாவட்டத்திற்கு இன்று (30-09-2025) போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் வருகை தர உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 30, 2025

பெரம்பலூர்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான கடைகளும் அக்.02-ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காந்தி ஜெயந்தி என்பதால், ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News September 29, 2025

ரூ.1,20,950 மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கல்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (29.09.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.1,20,950 மதிப்பிலான நலதிட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வழங்கினர். இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!