Perambalur

News October 18, 2025

பெரம்பலூர்: பட்டாசுகளை வெடிக்க வழிமுறைகள்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் குறைந்த அளவு ஒளி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கவும், திறந்தவெளியில் எளிதில் தீப்பற்றாத அளவுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், பட்டாசுகளை காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மக்களுக்கு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளார்.

News October 18, 2025

பெரம்பலூர்: வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து நேற்று (17-10-2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News October 17, 2025

பெரம்பலூர்: மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கலெக்டர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் குறைந்த அளவு ஒளி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கும், திறந்தவெளியில், எளிதில் தீப்பற்றாத அளவுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், பட்டாசுகளை காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரையும் வெடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 17, 2025

பெரம்பலூர்: ரூ.29,000 சம்பளம்.. அரசு வேலை!

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 17, 2025

பெரம்பலூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்து Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

News October 17, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களும், வடகிழக்கு பருவ மழையையொட்டி அடுத்த மாதத்திற்குரிய நவம்பர் மாத ஒதுக்கீடனா 12 முதல் 35 கிலோ அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். மேலும், நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்தில் பெறாதவர்கள் வழக்கம் போல தங்களுக்கு உரிய அரிசியினை நவம்பர் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News October 17, 2025

பெரம்பலூர்: தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் உதவித்தொகை பெற அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை tamilvalarchithurai.org/agavai என்ற இணையதளம் வாயிலாகவோ 17.11.2025-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 17, 2025

பெரம்பலூர்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க…

News October 17, 2025

பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வழங்கல்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் தொடங்க அரசின் சார்பில் ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ (அ) 8608237057, 9361109874, 8248928648, 6379080359 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 17, 2025

பெரம்பலூர்: நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தின் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 24.10.2025ம் தேதி அன்று பிற்பகல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!