Perambalur

News March 16, 2025

பெரம்பலூர்: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

News March 15, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு நாளை தொல் திருமாவளவன் வருகை

image

நாளை (15-03-2025) ஞாயிற்றுக்கிழமை அன்று விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட குன்னம், வேப்பூர், திருமாந்துறை உள்ளிட்ட கிராமங்களில் தனது கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்விற்கு நாளை பங்கேற்க உள்ளதை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்

News March 15, 2025

உலகப் புகழ் பெற்ற அரும்பாவூர் மரச்சிற்பம்

image

வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் கிராமத்தில் தயாரிக்கப்படும் மரச்சிற்பம் உலகப் புகழ் பெற்றது. இந்த மரச்சிற்பத்துக்கு 250 வருடங்களுக்கு முன்பே பழமையான வரலாற்றுச் சிறப்பு உள்ளது. இந்தப் பகுதியில் வாழும் மரச்சிற்பிகள், ஸ்ரீரங்கம் கோயில், அவிநாசி, வடபழனி, விராலிமலை என தமிழகத்தின் பல பிரசித்தி பெற்ற கோயில்களில் தேர்களைச் செய்தவர்கள். நம்ம மாவட்டத்தின் பெருமையை SHARE பண்ணுங்க!

News March 15, 2025

வேளாண் பட்ஜெடில் வெளியான முக்கிய அறிவிப்பு

image

தமிழக சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 15) வேளாண்துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் பெரம்பலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வாடகை கட்டடங்களில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு சொந்தமாக கட்டடங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட விவசாய மக்களே இந்த தகவலை SHARE பண்ணுங்க…

News March 15, 2025

சோழர்கள் முதல் பிரிட்டிஷார் வரை போரிட்ட ரஞ்சன்குடி கோட்டை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 17வது நூற்றாண்டைச் சார்ந்த ரஞ்சன்குடி கோட்டை, 1751 ஆம் ஆண்டில் வாலிகொண்டா போரின் போது போர் மையமாக இருந்தது.இதுமட்டும் அல்லாது ரஞ்சன்குடி கோட்டை, சோழர்கள் முதல் பிரிட்டிஷார் வரை பல போர்கள் நடந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஆகும். நம்ம ஊரு வரலாறை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News March 15, 2025

பெரம்பலூர் கலெக்டர் ஆபிஸ் முன் ஆர்ப்பாட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு 2025-26 பட்ஜெட்டில் குறைந்தபட்ச சிறப்பு பென்ஷன் ரூ.6750 வழங்க வேண்டி மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் சிறப்புரையாற்றினார். நிறைவாக மாவட்ட பொருளாளர் வீ.முத்துசாமி நன்றி உரை கூறினார்.

News March 15, 2025

பெரம்பலூர் 14 இடங்களில் நிதிநிலை அறிக்கை ஒளிபரப்பு

image

தமிழக அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, நிதி, சுற்றுச்சூழல்  அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கை நிகழ்வினை நேரலையாக பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் காணும் வகையில் 14 இடங்களில் நேற்று நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

News March 14, 2025

பெரம்பலூர் பெயர் காரணம் தெரியுமா?

image

இந்த ஊரில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்ததாலும், அதிலிருந்து பல பொருள்கள் இந்த ஊர் மக்கள் தயாரித்து வந்ததாலும், இந்த ஊருக்கு பிரம்பலூர் என்ற பெயர் வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பல்லூர் என்னும் பெயரே பெரம்பலூர் என மாறியதாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு இந்த ஊர் பெயர் காரணம் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க. SHARE பண்ணுங்க.

News March 14, 2025

பெரம்பலூருக்கு வரும் புதிய அரசு கலைக் கல்லூரி

image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பலூர் மக்களே SHARE பண்ணுங்க…

News March 14, 2025

கரும்பு ஏந்திய கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்

image

முருகனை வேலுடன் கண்டிருப்பீர்கள் ஆனால் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் என்ற ஊரில் முருகப்பெருமான் கையில் கரும்பு ஏந்திய கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரை கண்ணாரக்கண்டு தரிசிப்பவர்களின் வாழ்க்கை இனிமை மிகுந்ததாக அமையும். மேலும் இனிமையான வாழ்க்கைத் துணை அமைவார்கள் என்ற ஐதிகம் உள்ளது. கல்யாணத்திற்கு பெண்/பையன் தேடும் உங்களுக்கு தெரிந்தவர்களை இந்த கோயில் குறித்து SHARE பண்ணுங்க…

error: Content is protected !!