Perambalur

News August 31, 2025

பெரம்பலூர்: புதிய கலெக்டர் பற்றிய தகவல்கள்!

image

ந.மிருணாளினி 2001ல் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராக பணி நியமனம் பெற்றார். பின்னர் இணைப் பதிவாளராக புதுகை, திருச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், சென்னையில் கூடுதல் பதிவாளராகவும் பணிபுரிந்தார். கடந்த 2023-ல் இந்திய ஆட்சிப் பணிக்கு பதவி உயா்வு பெற்ற இவர், ஸ்ரீபெரும்புதூா் சாா்-ஆட்சியராக பதவி வகித்து, தற்போது பெரம்பலூா் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ளாா். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 31, 2025

செட்டிகுளத்தில் பட்டப் பகலில் பைக்கை திருடிய வாலிபர்

image

செட்டிகுளத்தில் பைக்கை திருடிய வாலிபரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர் நேற்று செட்டிகுளம் சென்ற அருண்குமார் (29) அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு SBI வங்கிக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு வந்து ஒருவர் அவரது பைக்கை திருட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அருண்குமார் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரைப் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

News August 30, 2025

பெரம்பலூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மக்களே..! வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த<> லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 30, 2025

பெரம்பலூர்: புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சி தலைவராக ந.மிருணாளினி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (30/8/2025) இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் அவர் காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்தார். தன்னுடைய பணிக்காலத்தின் பொழுது மிகவும் திறமையுடன் வேலையை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 30, 2025

பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்

image

பெரம்பலூர், இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>www.msmeonline.tn.gov.in என்ற<<>> இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News August 30, 2025

பெரம்பலூர்: உங்கள் நிலத்தை கண்டுபிடிக்க எளிய வழி

image

பெரம்பலூர் மக்களே, நீங்கள் வாங்கிய நிலம் அல்லது உங்கள் குடும்பத்தின் பூர்வீக நிலங்களின் பத்திரங்கள் கையில் இருந்தும், நிலம் சரியாக எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் நிலங்களை கண்டுபிடிக்க <>இங்கே கிளிக் செய்து<<>>, பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை ஒரு பைசா செலவில்லாமல் எளிமையாக கண்டுபிடிக்க முடியும். இதனை ஷேர் பண்ணுங்க!

News August 30, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மீண்டும் மாற்றம்!

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் பெற்று புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற சா.அருண்ராஜ் தற்சமயம் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது இவருக்குப் பதிலாக காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்த ந.மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News August 30, 2025

வேளாண் உபகரணங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று (ஆக.29) நடைபெற்றது. இதில், விவசாயிகளுக்கு ரூ.6.52 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்கள் மற்றும் வேளாண் இடு பொருட்கள் மாவட்ட ஆட்சியர் ச.அருன்ராஜ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.

News August 30, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் பெற்று புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற சா.அருண்ராஜ் தற்சமயம் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்த ந.மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News August 29, 2025

பெரம்பலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

பெரம்பலூர் மக்களே, முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE IT

error: Content is protected !!