Perambalur

News March 22, 2025

பெரம்பலூர் அருகே 2 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

image

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட நிலையில், வேப்பந்தட்டை வட்டம், தேவையூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கலியன் மகன் மதியழகன் (45) என்பவர், தனக்குச் சொந்தமான பெட்டிக் கடையில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்து வைத்திருந்தார். 2 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார், பெட்டிக்கடைக்காரரை கைது செய்தனர். 

News March 22, 2025

அரும்பாவூர்: சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்று (22.03.2025) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். நிகழ்வில் சுகாதார நிலைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News March 22, 2025

பெட்ரோல் பங்கில் ரூ.28.46 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது

image

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் கஜேந்திரன் எனபவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது பெட்ரோல் பங்கில், முதுநிலை மேலாளராக ச.சதீஷ் (37) பணியாற்றி வந்தார். இந்நிலையில், சதீஷ் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கணக்கில் காட்டாமல் ரூ. 28,46,764 மோசடி செய்தது அண்மையில் தெரியவந்தது. இதுகுறித்து கஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சதீஷை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தார்.

News March 21, 2025

பெரம்பலூர் : மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் மற்றும் 11,12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆயத்த கூட்டம் இன்று (21.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் பெரம்பலூரில் நடைபெற்றது.

News March 21, 2025

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் செய்த உதவி

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து 4 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவி விடுதிகள், 6 பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல மாணவி விடுதிகள் என 10 மாணவி விடுதிகளுக்கு ரூ.1.80 இலட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை (RO) மாணவிகளின் பயன்பாட்டுக்கு, விடுதி காப்பாளினிகளிடம் இன்று (21.03.2025) வழங்கப்பட்டது.

News March 20, 2025

அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை இங்கு https://www.arasubus.tn.gov.in/ செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 20, 2025

போலீசாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

image

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் நேற்று (மார்ச் 19) நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 43 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர், உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

News March 19, 2025

சங்கடங்கள் போக்கும் வாலீஸ்வரர் கோயில்

image

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கோனேரி ஆற்றங்கரையில் உள்ள வாலீஸ்வரர் கோயில் சோழர் ஆட்சி காலத்தில் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது. வாலி வழிபட்டதால் இது வாலீஸ்வரர், வாலாம்பிகை ஸ்தலமாக திகழ்ந்துள்ளது. பிரதோஷ காலங்களில் இங்கு சென்று வழிபட்டால் சங்கடங்கள் விலகி மனவலிமை பெறலாம் என்பது ஐதீகம் சிவ பக்தர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க

News March 19, 2025

கடற்படையில் வேலை: 327 குரூப் C காலியிடங்கள்

image

கடற்படையில் உள்ள குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் , லஸ்கார்‌- I, தீயணைப்பாளர், டோப்பஸ்‌பதவிக்கு உள்ளிட்ட பதவிகளில் உள்ள 327 காலியிடங்களும் நிரப்பபடவுள்ளது. மாத ஊதியம்: லஸ்கர்களின் சிராங் பதவிக்கு மாதம் ரூ.25,500 முதல் 81,100 வரை கிடைக்கும். இதற்கு <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நபர்களுக்கும் Share பண்ணுங்க…

News March 19, 2025

சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு 22.03.2025 மற்றும் 23.03.2025 ஆகிய நாட்கள் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தின் மூலமாக மார்ச் 20ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9443377570 எண்ணை அழைக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். இதை SHARE பண்ணுங்க

error: Content is protected !!