Perambalur

News October 21, 2025

பெரம்பலூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் மின்கம்பங்கள் வயல்வெளிகள் (ம) இதர இடங்களில் அருந்து விழுந்து இருந்தால் எச்சரிக்கையுடன் மின்சார துறையின் 9498794987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும், மேலும் பேரிடர் காலங்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையினை 1077 (அ) 18004254556 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் தகவல்.

News October 21, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகின்றது. இதனை தொடர்ந்து தென் கிழக்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (21.10.2025) பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2025

பெரம்பலூர்: ரூ.35,400 சம்பளத்தில்..அரசு வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE. ஷேர் பண்ணுங்க!

News October 21, 2025

பெரம்பலூர்: இவ்வளவு பழமையான இடங்களா?

image

பெரம்பலூர் மாவட்ட மிகவும் பழமையான மாவட்டமாகும். இம்மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்குமுன்பு கடலுக்குள் இருந்ததடாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பழமையான இடங்களை நாம் காண்போம்
➡️வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
➡️கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
➡️பாலதண்டபாணி கோயில் – 800 ஆண்டுகள் பழமை
➡️இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News October 21, 2025

பெரம்பலூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திலேயே அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News October 20, 2025

பெரம்பலூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>.
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News October 20, 2025

பெரம்பலூர்: வரலாற்று சிறப்பு மிக்க இடம் பற்றி தெரியுமா?

image

பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 120 மில்லியன் ஆண்டு பழங்கால மரம் ஒன்று கல்லாக மாறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 1940ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் இது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைவரும் தெரிந்து கொள்ள இதை ஷேர் பண்ணுங்க!

News October 20, 2025

பெரம்பலூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>bankofbaroda<<>>.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News October 20, 2025

பெரம்பலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

பெரம்பலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News October 20, 2025

பெரம்பலூர்: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு!

image

நாடும் முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் தீயணைப்புத் துறையின் அவசர எண்ணை அழைக்கலாம். பெரம்பலூர் கோட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு நிலையங்களின் எண்கள்: 1.பெரம்பலூர் – 04328 224255 2. ஜெயம்கொண்டம் – 04331 250359 3. செந்துரை – 04329 242399 4. துறையூர் – 04327 222401 5. வேப்பூர் – 04328 26640. SHARE IT

error: Content is protected !!