India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூரில் இன்று (ஏப்.05) மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காலை 11 முதல் மாலை 5 வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மின் கட்டணம், பழுதான மின்னளவி மாற்றுவது, குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மின் பகிர்மானவட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தெரிவித்துள்ளார். இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் SHARE செய்ங்க.
தமிழ்நாடு மாநில வாணிபகழக (டாஸ்மாக்) கிட்டங்கி பெரம்பலூர் மேலாளர் திருஞானம் இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தாராகவும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) பாரதிவளவன், பெரம்பலூர் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் என மொத்தமாக 22 பேரை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காலை 11 முதல் மாலை 5 வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மின் கட்டணம், பழுதான மின்னளவி மாற்றுவது, குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மின் பகிர்மானவட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தெரிவித்துள்ளார்.
கோடைகாலங்களில் எதெல்லாம் செய்யக்கூடாது என “மாவட்ட ஆட்சியர் அலுவலகம்” சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும், வெயில் அதிகமாக இருக்கும் பொழுது குழந்தைகள் முதியவர்கள் வெளியில் செல்ல வேண்டாம், வெயில் காலங்களில் டீ, காபி, ஆல்கஹால் போன்ற பானங்களை தவிர்க்கவும், வெற்றுக் கால்களுடன் நடக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி (Business Development Executive) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <
பெரம்பலூர் மாவட்டம் தேனூரில் உள்ளது இந்த நந்திகேஸ்வரர் கோயில். இக்கோயில் பிணி தீர்க்கும் தலம் என்று கூறப்படுகிறது. இங்குள்ள மூலவர் நந்திகேஸ்வரர், தாயார் நாகலெட்சுமி ஆவர். காமதேனு வழிபட்ட தலமாக போற்றப்படுகிறது. இங்கு அன்னைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனத்தை நீரில் கலந்து குடித்து வந்தால் குடல் நோய், வயிற்று வலி போன்ற தீரா நோயும் தீரும் என கூறப்படுகின்றது. உறவினர்கள், நண்பர்களுக்கு இதை பகிரவும்
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில்முனைவோருக்கு ஈரோடு, திருப்பூர் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் துவங்க அறிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஆகவே, பெரம்பலூர் மாவட்ட தொழில் முனைவோர்கள் அதிகாரப்பூர்வ <
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க…
வெண்பாவூர் அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதியில் சமையலர் செல்வி, இரண்டு மாணவிகளை தாக்கிய சம்பவம் மாவட்ட நல அலுவலரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சமையலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வு தொடர்பாக காவல்துறையின் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.