India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(ஏப்ரல் 19) அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 81 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. இதனால் ஒரு சில இடங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளாக காணப்பட்டது. இதனால் மக்களவைத் தேர்தலில் வயது முதிர்ந்த வாக்காளர்கள் வாக்கு சாவடிக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு நேற்று(ஏப்.19) நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 77.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. தொடர்ந்து, கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பெரம்பலூர் அருகே உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கலெக்டர் கற்பகம் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பொதுத் தேர்தல் 2024 இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 73 % வாக்குகள் பதிவாகியுள்ளது பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, லால்குடி, முசிறி, மணச்சநல்லூர், துறையூர் (தனி) ,பெரம்பலூர் (தனி), வாக்கிய பகுதிகளிலும் வாக்குப்பதிவான வாக்கு பெட்டிகள் தேர்தல் அலுவலர்கள், காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு என்னும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
பெரம்பலூர் ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் உண்டியல் திறப்பு இன்று,
திருக்கோவில் ஆய்வாளர் தீப லட்சுமி முன்னிலையில் திறக்கப்பட்டது. திருக்கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் ரொக்கம் மற்றும் நாணயங்களை எண்ணினர்.
இதில் உண்டியலில் ரெக்கம், தங்கம், வெள்ளி உட்பட சுமார் மொத்த மதிப்பு 3,20,000 என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
திருச்சி, லால்குடி அருகே ஐஜேகே கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ₹1 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறக்கும் படையினர் வருவதை அறிந்து வீட்டின் கழிவறையில் பணத்தை பதுக்கியுள்ளார் வினோத்சந்திரன். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி – மரவநத்தம் பிரிவு பகுதியில் தேர்தல் தணிக்கை குழுவினர் இன்று(ஏப்.16) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி, பொள்ளாச்சி மாவட்டத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் எடுத்து வந்த ரூ.3,30,000 ரொக்கத்தை தேர்தல் தணிக்கை குழுவினர் கைப்பற்றினர்.
பெரம்பலூா் மாவட்டத்தில் சித்திரை மாதத்தில் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். முயல் வேட்டையாடுவது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்கு உரிய குற்றமாகும். வனத்துறையினா் கிராமங்கள் தோறும் தற்போது ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனா். முயல் வேட்டையில் ஈடுபடுவோா் கண்டறியப்பட்டால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவா் என மாவட்ட வனஅலுவலா் குகனேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்
பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் இரண்டு சிறுத்தைகள் புகுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவுடன் பொய்யான செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது.
இது தவறான தகவலாகும். இது போன்று பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இரா.குகனேஷ் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை
பெரம்பலூர் மாவட்ட எல்லையான குன்னம் வட்டம், வயலப்பாடி பகுதியில் சிறுத்தை காலடி தடம் இருப்பதாக இன்று தகவல் வந்ததையடுத்து, பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் கு.கனேஷ் தலைமையில், அப்பகுதியில் கூண்டு மற்றும்
தெர்மல் ட்ரோன் கேமரா வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதனால் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.