Perambalur

News October 24, 2025

பெரம்பலூரில் 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பில்லங்குளம், வெண்பாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த பாண்டியன், பார்த்திபன், மருதமுத்து, ராஜா, அருண், தனம், பவுனாம்பாள், செல்வக்குமார், மதியழகன், ராஜந்திரன், ஜெயபால், கோமதி ஆகியோர்களை கைது செய்து, வழக்குப்பதிந்து; அவர்களிடமிருந்து மொத்தம் 573 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News October 24, 2025

பெரம்பலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News October 24, 2025

பெரம்பலூர்: இலவச சட்ட உதவி வேண்டுமா?

image

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04328-296206) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News October 23, 2025

பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

News October 23, 2025

பெரம்பலுர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

பெரம்பலுர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>அதிகாரப்பூர்வ <<>>இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News October 23, 2025

பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா, சட்டமன்ற தொகுதிகள், பேருராட்சிகள் என்னென்ன இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா?

✅4 தாலுகா
1.பெரம்பலூர்
2.குன்னம்
3.வேப்பந்தட்டை
4.ஆலத்தூர்

✅2 சட்டமன்ற தொகுதி
1.பெரம்பலூர் (தனி)
2.குன்னம்

✅1 நாடாளுமன்ற தொகுதி
1.பெரம்பலூர்

✅4 பேரூராட்சிகள்
1.அரும்பாவூர்
2.இலப்பைகுடிக்காடு
3.குரும்பலூர்
4.பூலாம்பாடி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 23, 2025

பெரம்பலூர்: முருகன் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா

image

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயிலில், நேற்று முதல் நாள் கந்தசஷ்டி பெருவிழா நடைபெற்றது. கந்தசஷ்டி பெருவிழாவில் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகர் மற்றும் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இந்த பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News October 23, 2025

பெரம்பலூர்: டிகிரி போதும்..வங்கியில் வேலை!

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK <<>>HERE]
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 23, 2025

பெரம்பலூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் (அக்.24) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் முகாமில் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

பெரம்பலுர்: உதவித்தொகைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

image

பெரம்பலூர், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் யாசஸ்வி கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க (நவம்பர் 15) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!