Perambalur

News June 12, 2024

பெரம்பலூர்: விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்சக்ஷா பதக்க விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற விருப்பமுள்ளவர்கள் awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.6.2024 ஆகும். மேலும் விபரங்களுக்கு இளைஞர் நலன் அலுவலரை 74017- 03516 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்படலாம் என ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்சக்ஷா பதக்க விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற விருப்பமுள்ளவர்கள் awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.6.2024 ஆகும். மேலும் விபரங்களுக்கு இளைஞர் நலன் அலுவலரை 74017- 03516 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்படலாம் என ஆட்சியர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி ஷ்யாம்ளாதேவி தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (ம) காவல் துறையின் வாகன ஆய்வும் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி அனைத்து காவல்நிலைய பொறுப்பு அதிகாரிகள் முன்னிலையில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனை வழங்கினார். பெரம்பலூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கையாள்வது குறித்து கலந்தாய்வு நடத்தினார்.

News June 11, 2024

கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையின மக்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவிகள் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகம் பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (ம)அதன் கிளைகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கடன் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

விடுதிகளில் சேர்ந்து பயன்பெற கலெக்டர் அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் ,சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவிகள் அரசு விடுதிகளில் சேர்ந்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் அழைப்பு விடுத்தார்.
விடுதிகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் இடம் குறைந்த பட்சம் 8கி.மீ தொலைவு இருக்க வேண்டும்.

News June 10, 2024

உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறையினரின் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததற்கும் அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கும் உதவியாக காவலர் சேமநலநிதி உதவித்தொகையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி மாணவர்களுக்கு வழங்கினார்.

News June 10, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 201 மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்

image

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் கற்பகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் மொத்தம் 34 நபர்களுக்கு ரூ.8,61,420 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

பூ கொடுத்து வரவேற்பு 

image

பெரம்பலூர் நகரப்பகுதி, முத்துநகர் ஊ.ஓ.து பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட இன்று வருகை புரிந்த அமைச்சர் ச.சிவசங்கருக்கு, அப்பள்ளி மாணவர்கள் ரோஜா பூ வழங்கி வரவேற்றனர். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News June 10, 2024

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி

image

துறைமங்கலம் கேகே நகர் பகுதியில் வசித்து வருபவர் விமலா. இவரது வீட்டில் நடேசன் வசந்த் ஆகிய 2 நபர்கள் வாடகைக்கு குடியிருந்து வரும் நிலையில் விமலா குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற நேரத்தில், வசந்த் மட்டும் வீட்டில் தங்கி உள்ளார், அதிகாலை வசந்த் கீழே வந்து பார்த்த போது விமலா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் கலைந்து கிடந்துள்ளன, புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!