Perambalur

News June 22, 2024

பெரம்பலூரில் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு

image

பெரம்பலூரில் அனைத்து துறை சார்ந்த பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் வருவாய் துறை, மின்வாரியத் துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறையில் 5 வருடம், 8 வருடத்திற்கு மேலாக பணியில் சேர்ந்து பணியாற்றி வரும் உதவியாளர் மற்றும் அரசு அலுவலர் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 773 பேர் தேர்வை எழுதியுள்ளனர்.

News June 22, 2024

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் க.கற்பகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியவை எளிதில் விண்ணப்பித்திட நடைபெற்றது. மேலும் கல்விச்சான்று, சாதிச்சான்று, தொழில் தொடங்க ஏற்பாடு, இலவச வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

News June 21, 2024

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியவை எளிதில் விண்ணப்பித்திட நடைபெற்றது. மேலும் கல்விச்சான்று, சாதிச்சான்று, தொழில் தொடங்க ஏற்பாடு, இலவச வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

News June 21, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் அறிவிப்பின்படி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (21.6.24) தேதி இன்று காலை.10 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 8, 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

News June 21, 2024

அரசு மருத்துவமனை அருகே முதியவர் சடலம்

image

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே நேற்று 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 21, 2024

பெரம்பலூர்: மாணவர்களுக்கு பாராட்டு

image

ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் நடை நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம் எறையூர் நேரு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சாய்நிவேஷ் , ஹரிகிருஷ்ணன் மற்றும் உண்டு உறைவிட பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் வெங்கடேசன் ஆகிய 3 பேர் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வென்றனர். இவர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

News June 20, 2024

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(21.6.24) நடைபெறவுள்ளன என கலெக்டர் கற்பகம் அறிவித்துள்ளார். இதில் 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், https://tnprivatejobs.tn.gov.in/ என்ற முகவரியில் விண்ணப்பித்து பங்கேற்குமாறு தெரிவித்துள்ளனர்.

News June 20, 2024

பெரம்பலூரில் ஆ .ராசாவிற்கு வரவேற்பு

image

எம்.பி யாக 6 வது முறையாக வெற்றி பெற்று மக்களவை கொறடாவாக நாளை(ஜூன்-21) 12 மணியளவில் பெரம்பலூருக்கு வருகைதரும் திமுக து.பொதுச்செயலாளர் ஆ.இராசாவை வரவேற்கும் விதமாக திருமாந்துரை டோல், மற்றும் பெரம்பலூர் 4 ரோடு பகுதியிலிருந்து மா.இளைஞணி ,மாணவரணி சார்பாக இருசக்கர வாகனபேரணி மூலம் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகர்மன்றத் து.தலைவர் ஹரிபாஸ்கர் தெரிவத்துள்ளார்.

News June 20, 2024

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திய டூ வீலர்கள் பறிமுதல்

image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புகார் கூறப்பட்டது. அதனால் நேற்று புதிய பேருந்து நிலையம் உள்ளேயும் வெளியும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 32 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகமது அனிபா தலைமையிலான போலீசார்   பறிமுதல் செய்தனர்.

News June 19, 2024

பெரம்பலூர் அருகே கலெக்டர் விசிட்

image

பெரம்பலூர்: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் அவர்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஜூன் 19ம் தேதி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!