India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 28ஆம் தேதி கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர் பாசனம் வேளாண்மை கடனுதவிகள் வேளாண்மை இடு பொருட்கள் (ம) விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும், விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் கற்பகம் இன்று தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்: தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர், அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பு, அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சங்கத்தின் கிளைச் செயலாளர் அறிவழகன் தலைமையில் இன் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் முன்பு அதிமுக கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் செய்து கோசம் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செங்குணம் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு செங்குணம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ப.தனராசு ஏற்பாட்டில் நேற்று பெரம்பலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி பிரிவில் அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிசசியை சேர்ந்த, பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன் கலைவாணன் முதன் முதலாக இரத்தம் தானம் செய்து உதவினார்.
பெரம்பலூர் மதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் இல்ல திருமண விழா இன்று பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக புதிய கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பெரம்பலூர் கிழக்கு மா.செயலாளர் தங்க இரத்தினவேல் கொடியேற்றி வைத்தார், மா.தலைவர் மைக்கேல், தெற்கு தொகுதி செயலாளர் சரவணன், சிதம்பரம் தொகுதி நாதக வேட்பாளராக போட்டியிட்ட ஜான்சிராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு ரூபாய் 76.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு நேற்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவை, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேரில் சந்தித்து பெரம்பலூர் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்தார்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று, முதன் முறையாக பெரம்பலூருக்கு வருகை தந்த திமுக துணை பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு நேற்று குரும்பலூர் திமுக சார்பில் பேரூர் மாணவரணி துணை அமைப்பாளர் திவான், வார்டு செயலாளர் பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அம்மாபாளையம் அருகே பெரம்பலூர் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அம்மாபாளையம் நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அன்பரசு, பால்ராஜ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.