India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வேப்பந்தட்டை வட்டம் வெண்கலம் அரசு பண்ணையில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு தேவையான காய்கறி பயிர் நாற்றுகள், பழகன்றுகள், தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தரமான தென்னங்கன்று உற்பத்தி செய்து தயார் நிலையில் உள்ளது. ஒரு கன்றுக்கு ரூ. 60 செலுத்தி விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் க.கற்பகம் நேற்று(ஜூன் 25) தெரிவித்துள்ளார். மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் – 10581, ஆட்சியர் – 94441 75000, காவல் துறையினரின் Whatsapp No. 790413 6038 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என இன்று (ஜூன்-25) கலெக்டர் க.கற்பகம் தெரிவித்தார். மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 10581, மாவட்ட ஆட்சியர் தொடர்பு எண் 94441-75000 என்ற எண்ணிற்கோ, காவல் துறையினரின் Whatsapp No. 790413-6038 என்ற எண்ணை அழைக்கலாம்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 4-தாலுகாவிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று(ஜூன்-25) நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில்(தாலுகா வாரியாக) பெரம்பலூர்- 225 மனுக்களும், வேப்பந்தட்டை – 126 மனுக்களும், குன்னம் – 115 மனுக்களும், ஆலத்தூர் – 70 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன்- 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி, பவளக்கொடி தம்பதியினரின் மகள் நிகிதா(10). இவர் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனக்கு வயிறு வலிப்பதாக பள்ளி ஆசிரியரிடம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்தவர் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அருண் நேரு இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அருண் நேரு, பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி உயிரிழப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு தேமுதிக மாவட்டச் செயலாளர் துரை. சிவா ஐயப்பன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், வருகின்ற ஜூன் 30 ஆம் தேதியன்று 2024 – 2025 ஆம் ஆண்டிற்கு ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கற்பகம் அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர்: தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 416 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.