Perambalur

News July 20, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26.07.2024 அன்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 20, 2024

நிலத்தடி நீர் பாதுகாப்பு பணிகள் சிறப்பாக உள்ளது

image

பெரம்பலூரில் மத்திய அரசு நீர் வளத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து பல்வேறு பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இது சார்ந்த திட்டப் பணிகளுக்கு மத்திய அரசின் நிதியை பெற்றுதர பரிந்துரை செய்கிறோம் என கூறினர்.

News July 20, 2024

அரசின் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் சென்னை வளர்ச்சி குழும தலைமை செயல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி 16 ஆவது புதிய ஆட்சியராக கிரேஷ் லால்ரின் டிகி பச்சாவ் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறினார்.

News July 19, 2024

புதிய ஆட்சியராக  கிரேஸ் லால் ரின்டிகி பச்சாவ் 

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியராக கற்பகம் பணிபுரிந்த நிலையில், ஆட்சியர் மாற்றம் செய்து தமிழக அரசின் உத்தரவிட்டது. அதன் பேரில்  புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக கிரேஸ் லால் ரின்டிகி பச்சாவ்  இன்று மாலை 5.15 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை.23, ஆகஸ்ட்.4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி

image

தமிழ்நாடு வனத்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்ட வனப்பரப்பை 33 விழுக்காடு அதிகரிக்கும் நோக்கில் தேக்கு, மகாகனி, செம்மரம், கொய்யா, நெல்லி, எலுமிச்சை போன்ற மரக்கன்றுகள் இலவசமாக பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்கு ஆதார் அட்டை, சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (3), ஆகியவற்றின் நகல்களுடன் 7845533752 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி

image

தமிழ்நாடு வனத்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்ட வனப்பரப்பை 33 விழுக்காடு அதிகரிக்கும் நோக்கில் தேக்கு, மகாகனி, செம்மரம், கொய்யா, நெல்லி, எலுமிச்சை போன்ற மரக்கன்றுகள் இலவசமாக பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்கு ஆதார் அட்டை, சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (3), ஆகியவற்றின் நகல்களுடன் 7845533752என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

மக்களுடன் முதல்வர் முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

image

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், எளம்பலூர், எசனை, கீழக்கரை, வடக்குமாதவி ஆகிய கிராமங்களுக்கு 19-ஆம் தேதி வெங்கடேஸ்வரா மஹாலிலும், செங்குணம், அய்யலூர், கல்பாடி, கவுல்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு வரும்-23 ஆம் தேதி கவுல்பாளையம் அன்னை மண்டபத்திலும், லாடபுரம், மேலப்புலியூர், களரம்பட்டி கிராமங்களுக்கு 24-ஆம் தேதி மேலப்புலியூர் நாயுடு சங்க கட்டிடத்திலும் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

பெரம்பலூர்: இடியுடன் கூடிய மழை

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!