Perambalur

News July 23, 2024

பொது மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றபோது பெரம்பலூர் மாவட்டச் சேர்ந்த சித்ரா, கணேசன் மற்றும் ராஜ்குமார் என்பவர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதனால் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News July 23, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் ‘பார்வோ வைரஸ்’

image

‘பாா்வோ வைரஸ்’ நோய் பாதிப்பால், பெரம்பலூா் மாவட்டத்தில் ரத்தக் கழிச்சல் ஏற்பட்டு நாய் குட்டிகள் அதிகமாக உயிரிழந்து வருகின்றன. இந்த வைரஸ், 1 வயதுக்குள்பட்ட நாய் குட்டிகளை மட்டுமே அதிகளவில் தாக்கும். இது நாய் குட்டிகளின் உடலில் நோய் எதிா்ப்பு மண்டலத்தை தாக்கி செயலிழக்க செய்வதால், குட்டிகள் ஓரிரு நாள்களில் சோா்ந்து உயிரிழந்துவிடும். தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும்.

News July 22, 2024

சாதனை படைத்த மாவட்ட மகளிர் அணி

image

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள், திருச்சி மாவட்டத்தில் (ஜூலை 20 மற்றும் 21) ஸ்ரீரங்கம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி போட்டியை துவக்கி வைத்தார். இந்த போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணையின் மகளிர் அணி ஒரு தங்கம், 4 வெள்ளி, 3வெண்கல பதக்கங்களை பெற்றனர்.

News July 22, 2024

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்

image

பெரம்பலூர் காரியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். அங்கிருந்த போலீசார் விசாரணை செய்ததில் தனக்கு அழகுவேல் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மாதங்களில் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கு காரணமாக இருந்த அவர்கள் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

News July 22, 2024

குறவர்கள் சாதி சான்றிதழ் வழங்க ஆட்சியரிடம் மனு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் குறவர்கள் இன மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள், தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே எங்கள் பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்விடம் மனு கொடுத்தனர்.

News July 22, 2024

மின் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

image

மின் உயர்வை கண்டித்தும், தமிழக அரசு மின் உயர்வை திரும்பப்பெற வேண்டுமென தெரிவித்து, பெரம்பலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன் தலைமையில் இன்று
கோரிக்கை மனுவை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவிடம் கொடுத்தனர்.
இந்நிகழ்வின் போது மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காரை ஆர். சுப்ரமணியன் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

News July 22, 2024

அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கற்பகம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையராக பணிபுரிந்து வந்த கிரேஸ் வால்ரின்டிகி பச்சாவ் என்பவர் பெரம்பலூர் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், இன்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை புதிய ஆட்சியர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News July 22, 2024

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

image

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வருகிற 30ஆம் தேதியும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி 31ஆம் தேதியும் பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் துறையூர் சாலையில் உள்ள பாரத சாரணர் பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. எனவே இதில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளும் படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 21, 2024

பெரம்பலூரில் 5 செ.மீ மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 5 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News July 21, 2024

கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பாக ரோந்து பணி

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஷ்யாம்ளா உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் மங்களமேடு உட்கோட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பாக ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

error: Content is protected !!