Perambalur

News August 7, 2024

விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துறை அறிவிப்பின்படி, அரசு மானியத்தில் தெளிப்பு நீர் பாசனம், சொட்டுநீர் பாசனம், அமைப்பதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செட்டிகுளம், கிராம நிர்வாக அலுவலகத்தில் 09.08.2024, காலை-10 மணிமுதல் நடைபெறவுள்ளது. விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 7, 2024

பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 1333 குறட்பாக்களை ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 15,000 பரிசு வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று கொண்டு, 20.9.2024 அன்று மாலைக்குள் விண்ணப்பங்கள் அளித்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-225988 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை ஷேர் செய்யவும்.

News August 7, 2024

பெரம்பலூரில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

image

பெரம்பலூரிலிருந்து அரணாரை வழியாக புதுநடுவலூர் வரை செல்லும் சிற்றுந்து இன்று காலை பெரம்பலூர் பழைய பேருந்துநிலையம் வந்தடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு சரியான முறையில் அரசு பேருந்து இயக்கப்படாததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

News August 7, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் 324 மி.மீ. மழை

image

பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அதன்படி பெரம்பலூர், தழுதாழை, பாடாலூர், வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம், அகரம்சீகூர், செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. மேலும் மாவட்டத்தில் வேப்பந்தட்டை பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 29.45 மி.மீ. மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News August 7, 2024

பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் இந்த மாதம் 21ஆம் தேதி வரை தோல் கழலை நோய் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அருகிலுள்ள கால்நடை மருத்துவனைக்கு சென்று தங்களது பசு மற்றும் எருமைகளுக்கு தவறாமல் தடுப்பூசியினை போட்டுக்கொண்டு நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளும் படி ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேற்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் செய்யவும்.

News August 6, 2024

பெரம்பலூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று பெரம்பலூரில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2024

பெரம்பலூரில் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

image

பெரம்பலூர் மாவட்டம் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதன்மைக் கல்வி அலுவலர் சுகானந்தம் போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் நடக்க இருக்கும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதில் 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

News August 6, 2024

பெரம்பலூர் ஆட்சியர் அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கான நேரடிச் சேர்க்கை 1.7.2024 முதல் 31.7.2024 வரை நிறைவு பெற்ற நிலையில், தற்போது 16.8.2024 வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையத்தை உபயோகிக்கவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

பெரம்பலூரில் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

image

பெரம்பலூர் மாவட்டம் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதன்மைக் கல்வி அலுவலர் சுகானந்தம் போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் நடக்க இருக்கும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதில் 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

News August 6, 2024

பெரம்பலூர் திமுக அறிவிப்பு

image

கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை காலை 10மணியளவில், எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில், அமைதிப்பேரணிச் சென்று அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்வும், முன்னதாக மாவட்ட திமுக அலுவலகத்தில் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளதால் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!