India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 32 மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் முரளிதரன் என்ற இளைஞர் நேற்று தனியார் ஹோட்டலில் வாங்கிய ஆப்பம் தரம் இல்லாமல் இருப்பதாகவும், தரமற்ற உணவுகளை தரும் இது போன்ற உணவகங்களை பெரம்பலூர் உணவு கட்டுப்பாட்டு துறை கண்டு காணாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கடையின் முதலாளியிடம் கேட்டால் மெத்தன போக்காக பதில் கூறுகிறார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய 4 ஒன்றியங்களில் 121 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் ஆகஸ்ட் 15 அன்று காலை 11 மணியளவில் சுதந்திர தின விழா கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெறும் என்றும், ஊராட்சி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023-24ஆம் ஆண்டின் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக அறிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tntourismaward.com என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களுடன் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக்கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான திட்டத்தினை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 3,278 மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள்.இந்நிகழ்வின் போது கலெக்டர் மற்றும் எம் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களின் காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவில் ஏ.எஸ்.பி.யாக பணிபுரிந்த வேல்முருகன், சேலம் மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இது தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு இணையாக நடைபெறுகிறது. எனவே இதில் அதிக அளவு வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் தொடர்புக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். SHAREIT
தமிழ் மாநில காங்கிரஸ் பெரம்பலூர் மாவட்ட தலைவராக ஆலத்தூர் ஏ எஸ் ஆர் சித்தார்த்தன், மாநில குரு உறுப்பினராக வி. கிருஷ்ண ஜனார்த்தன், மாநில கொள்கை பரப்பு செயலாளராக காரை சுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் சிறப்பு அழைப்பாளராக நாட்டார் மங்கலம், ஜெயராமன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி கே வாசன் நேற்று நியமனம் செய்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-2024ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismaward.com என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 2 தேர்வில் கு. பிரேமா என்பவர் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்துள்ளார். இவர் நேற்று பெரம்பலூர் மாவட்ட நூலக அலுவலரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட மைய நூலகத்தின் சார்பாகவும் நூலக அலுவலரின் சார்பாகவும், மாவட்ட நூலக அலுவலர் மற்றும் மாவட்ட மைய நூலகர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.