India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 382 பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலத்தூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் மலர் கொடி, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சம்பளத்தில் இருந்து 3500 ரூபாயை நிவாரண நிதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அவர்களிடம் வழங்கினார். மலர் கொடியில் இந்த செயலை மாவட்ட ஆட்சியர் வருவாய் அலுவலர் மற்றும் சக அதிகாரிகள் பாராட்டினர்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வேலூர் கிராமத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் எம்.பி.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்.எல்.ஏ பிரபாகரன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் நபர்களை காவல்துறையினர் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஒருவர் சாக்குப்பையுடன் வருவதை கண்டு காவல் துறையினர் சோதனை செய்ததில், சாக்குப்பையில் கத்தி இருந்தது தெரியவந்தது. பின்னர், அந்த நபரை இத்தகைய ஆயுதங்களுடன் இங்கு வரக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஆதிதிராவிடா் வீட்டு வசதி,மேம்பாட்டுக் கழகம் மூலம் 2022 -2023, 2023 -2024 இல் +2 தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பயில விண்ணப்பிக்கலாம். இதில் ரூ. 17,000 முதல் ரூ. 22,000 வரையிலும், பின்னா் ரூ.70,000 மாத ஊதியமாகப் பெறலாம். விவரங்களுக்கு 04328 – 276317 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் 8ஆம் ஆண்டு விதைத் திருவிழா மாவட்ட இயற்கை உழவர் குழு சார்பில் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை வளாகத்தில் நடைபெற்றது. நாட்டு விதைகள், நெல் விதைகள், சிறுதானியங்கள், உணவு மூலிகைகள் போன்ற பல்வேறு விதமானமான வகையான படைப்புகள் காட்சியளிக்கப்பட்டன. சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் ஆர்வமுடன் இந்த திருவிழாவில் பங்கேற்றனர்.
குன்னம் அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த மயான பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி போடுவதால் 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளையும் இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தொலைதூர புற நகர் ( சென்னை, கடலூர், வேலூர் போன்றவை உட்பட ) பேருந்துகள் முக்கியமாக இரவு நேரங்களில் துறைமங்கலம் வழியாக இயக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. மேலும், துறைமங்கலம் வழியாக இயக்க வேண்டும், தவறும் ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 5 பிரிவுகளின் கீழ் மாவட்ட மண்டல, மாநில அளவில் நடைபெற உள்ளது. மாணவர்கள், பொதுப் பிரிவினருக்கும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க 25-ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.