India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 28) வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அலெர்ட் கொடுத்துள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 -29 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். எனவே, பணிக்கு செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்
மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்கும் பொருட்டு 5 குழுக்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று ஒரு நாள் சிறப்பு வேட்டை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1,42,000 மற்றும் 9 செல்போன்கள் மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மனோ தங்கராஜ் அமைச்சராக பதவி பொறுப்பேற்கிறார்.
சங்ககிரி அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹரிபாஸ்கர் (வயது 25) என்ற இளைஞர், எதிரே வந்த மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல்: குமாரபாளையத்தில் 2012ஆம் ஆண்டு வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், திருப்பத்தூர் மாவட்டம் கோட்டான்கல்லூர், பெரம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாது என்கிற கொர மாது (வயது 47). இவர் 2015ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். நீதிமன்ற உத்தரவின்படி இவரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கோவையில் கைது செய்தனர்.
கரூர்: காட்டு முன்னூர் பகுதியில் உள்ள தங்கராஜ் தோட்டம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து க.பரமத்தி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மணிவேல் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆர்.எஸ் இராஜகண்ணப்பனுக்கு நேற்று (ஏப்.27) அமைச்சர் பொன்முடி வகித்து வந்த வனத்துறை மற்றும் காதி துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று 27ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன், கோயில் திருவிழா 11ஆம் நாளை முன்னிட்டு நேற்று அம்மன் வீரபாண்டியிலிருந்து பஜர் தெரு, அரண்மனை தெரு, நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதியில் இன்று, சாமி ஊர்வலம் வந்தனர். இதில் ஊர் பொதுமக்கள், பார்த்தார்கள், கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அனைத்தையும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தேனியில் தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கம் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில், பத்திரிகையாளர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் தேனி மாவட்ட தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கம் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.