Tamilnadu

News April 28, 2025

செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

image

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16848) திங்கட்கிழமை இன்று (ஏப்.28) விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து மாற்றுப் பாதையில் இயங்கும். வழக்கமாகச் செல்லும் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது. மாற்றாக விருதுநகர், காரைக்குடி, திருச்சி வழியாக மயிலாடுதுறை வந்தடையும் என அறிவிக்கப்பட்டது.

News April 28, 2025

திருப்பூரில் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழப்பு

image

கோவையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்-மகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு பிரித்விக்(2) என்ற மகன் உள்ளார். இத்தம்பதி, குழந்தையுடன் அரசு பஸ்சில்  நிலக்கோட்டை சென்று வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது, தாராபுரம் தனியார் உணவகத்தில் பேருந்து நிறுத்தும் போது, குழந்தைக்கு பால் கொடுத்துள்ளனர். குழந்தைக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்த்த போது குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

News April 28, 2025

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியை சேர்ந்த விவசாயி குப்பன் (45), இவரது உறவினர் மகன் கண்ணன் (13) என்பவரை வளர்த்து வந்தார். 7ஆம் வகுப்பு முடித்துள்ள சிறுவன் அமராபுரம் கிராமத்திற்கு பசுமாடுகளை மேய்க்க சென்றார். நீண்ட நேரம் கண்ணன் வீடு திரும்பாத நிலையில், அமராபுரம் கிராம குளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 28, 2025

டூவீலர் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

image

சிவகிரி சேனைத்தலைவா் மண்டபம் அருகே பெண் ஒருவா் அவரது 9 வயது மகளுடன் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த சிறுமி, நடந்து சென்ற சிறுமியின் மீது மோதியதில் அவா் காயமடைந்தாா். டூவீலரில் வந்து விபத்தை ஏற்படுத்தியது சிவகிரி வடக்கு தெருவை சோ்ந்த குருசாமியின் 15 வயது மகள் என தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை டூவீலர் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை கைது செய்யப்பட்டாா்.

News April 28, 2025

காதலிக்கு  நிச்சயமானதால் மாணவர் தற்கொலை

image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரை சேர்ந்த தனலட்சுமி – அர்ச்சுனன் தம்பதியரின் மகன் சரவணகுமார் (18) என்பவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமான விரக்தியில் கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2025

லிப்ட் கொடுத்து பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 2 பேர் கைது

image

விருதாச்சலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவர் லிப்ட் கொடுத்தனர். பாதி வழியில் இறங்கி இவரை தாக்கி பணம், செல்ஃபோனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் நேற்று பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

News April 28, 2025

ஓட்டுநரை தாக்கி ஆட்டோவை சேதப்படுத்திய சிறுவர்கள் கைது

image

ஸ்ரீவி.நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (38). லோடு ஆட்டோ ஓட்டுநர். திருப்பதியுடன் வேலை பார்க்கும் விஜயன் என்பவருக்கும், சிறுவர்கள் சிலருடன் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஆட்டோவில் சென்ற திருப்பதி,விஜயனுடன் தகராறில் ஈடுபட்ட சிறுவர்கள் செங்கலால் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சென்றனர். சம்பவத்தில் தொடர்புடைய  ஸ்ரீவி.நகர் போலீசார் 17வயது இரு சிறுவர்களை கைது செய்து விசாரணை

News April 28, 2025

ஈரோட்டில் இன்று மின்தடை

image

ஈரோட்டில் இன்று (ஏப்.28) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் சூரியபாளையம், சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., கங்காபுரம், செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பால் ஆகிய பகுதியில் இன்று காலை 9 மணி to மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News April 28, 2025

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

image

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கெங்காபுரத்தை சேர்ந்தவர் மதி (17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் ராமச்சந்திரபுரத்திலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்ற மதி நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் மதியை சடலமாக மீட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 28, 2025

திருவாரூர்: காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

image

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி(46) என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண், கடந்த 23ம் தேதி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து கணவர் ரமேஷ் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள கந்தபரிச்சான் ஆற்றில் கஸ்தூரி அரைகுறை ஆடையுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!